புதிய தென்றல்

Sunday, December 31, 2006

'எல்.ஜி.,'ன்னா...?

'எல்.ஜி.' பற்றி ஒரு நன்பரின் கருத்து

'எல்.ஜி.,'ன்னா, கூட்டுப் பெருங்காயம்ன்னு நாட்டு மக்களுக்குத் தெரிந்த அளவுக்கு, எல்.கணேசனை எத்தனை பேருக்குத் தெரியும்? 'தமிழ் மொழிப் போர் தளபதி'ன்னு பெரிசாச் சொல்லிக்கிடுவாரு; இதே பேருல, பா.ஜ., கட்சியில் உள்ளவரை, இல.கணேசன்னு, 'இன்ஷியல்' சுத்தமா தமிழ்ல சொல்றாங்க; ஆனா, பகுத்தறிவுப் பாசறையில் உருவான இவர், 'இல' என்றால், 'சென்டி மென்ட்' படி, இல்லை என்றாகிவிடும் என்று, இன்ஷியலை கூட, 'எல்' என்று ஆங்கிலத்தில் போட்டுக் கொள்வார்.

சில காரோட்டிகள் ஓட்டும் கார்களில் நிரந்தர, 'எல்' போர்டு இருப்பது போல், தமிழக அரசியல் சாலையில் என்றென்றைக்கும் 'எல்' போர்டு ஆன எல்.கணேசன், பழக்க தோஷம் காரணமாக, ம.தி.மு.க.,வின் அவைத் தலைவர் ஆக்கி, மதிப்பும், மரியாதையும் கொடுத்திருந்தார் வைகோ.

தி.மு.க.,வில் இருந்து விலகியது முதல், சமீபத்தில் அ.தி.மு.க.,வுடன் கூட்டு வைத்தது வரை சகலத்திலும் இந்த 'எல்' போர்டின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்ததால் தானோ என்னமோ சகல திறமைகளும் இருந்தும், தமிழக அரசியலில் வைகோ சோபிக்காமலிருந்தது.தான் எம்.பி.,யாகவுமிருந்து கொண்டு, கடந்த சட்டசபைத் தேர்தலில் தன் மகனுக்கு எம்.எல்.ஏ., சீட்டும் கேட்டு, கிடைக்காததாலும், மத்திய அமைச்சர் பதவி வாங்கித் தராததாலும், 'எதைத் தின்றால் பித்தம் தெளியும்' என்பது போல், 'எதைச் செய்தால் அமைச்சர் பதவி கிடைக்கும்' என்ற ஆலோசனை பெற்று, வைகோவை சாடத் துவங்கியுள்ளார் எல்.ஜி.,'அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை'யாக அமைச்சர் பதவியை நம்பி, அவைத் தலைவர் ஆக வைத்திருந்த வைகோவை விட்டுப் போவது எல்.ஜி.,க்கு நல்லதல்ல; ஆனால், வைகோவுக்கு நல்லது.

'விட்டது தொல்லை விளாம்பழத் தோலோட...'

வைகோ தொடர் குற்றச்சாட்டு: கண்க்கு காட்டுவாரா கருணாநிதி?

வைகோ தொடர் குற்றச்சாட்டு: கணக்கு காட்டுவாரா கருணாநிதி?

ம.தி.மு.க.,வின் நான்கு எம்.பி.,க்களை தங்கள் கணக்கில் காட்டி மத்திய அரசில் அமைச்சர் பதவியை தி.மு.க., பெற்றுள்ளது என்ற குற்றச்சாட்டை வைகோ தொடர்ந்து எழுப்பி வருகிறார். இதற்கு முதல்வர் கருணாநிதி பதில் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ம.தி.மு.க.,வில் இருந்து வைகோவால் நீக்கப்பட்ட கணேசன் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது, "தனக்கு மத்திய அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாகக் கூறி வைகோ துரோகம் செய்து விட்டார்; முதுகில் குத்தி விட்டார்' என்று தெரிவித்து இருந்தார். கணேசனின் இந்த குற்றச் சாட்டுக்கு பதில் அளித்து வைகோ கூறியதாவது:

மத்திய அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாக கூறி வைகோ என் முதுகில் குத்திவிட்டார் என்று முன்னாள் அவைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை.

கட்சியின் தனித்தன்மையை காக்க வேண்டும் என்றால் மத்திய அமைச்சரவையில் சேரக்கூடாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது வேறு எந்த தீர்மானத்திற்கும் கிடைக்காத அளவு பலத்த கைதட்டல் கிடைத்தது. இதன் பிறகு, தேர்தல் முடிந்ததும் "அமைச்சர் பதவி வேண்டும்' என கணேசன் என்னிடம் கேட்டார். "அது எப்படிங்க முடியும், கட்சி பொதுக்குழு தீர்மானம் இருக்கே'ன்னு நான் பதில் சொன்னேன். இருந்தாலும், இடைவிடாது தினமும் கேட்டு வந்தார். இடையில் செஞ்சி ராமச்சந்திரன் வந்து "எனக்கும் ஆசை உண்டு; ரெண்டு அமைச்சரா கேளுங்க'ன்னு சொன் நார். "சரி நான் பேசுகிறேன். ஆனால், பொதுக்குழுவைக் கூட்டி இந்த விஷயத்தில் முடிவெடுக்க எனக்கு அதிகாரம் பெற்றுக் கொண்டு முடிவெடுக் கலாம்' என்றேன். "எனக்குத் தெரியாத பொதுக்குழுவா'ன்னு கணேசன் கேட்டார். "அப்படியில்லீங்க... கட்சியின் இருதயம் போன்றது பொதுக்குழு. அதிலே ஒரு கொள்கை முடிவு எடுத்த நிலையிலே அதை மீற முடியாதே' என்று நான் சொன்னேன். "அதையும் மீறி நீங்க அமைச்சராகணும்னா கட்சியிலே எல்லா தலைவர்கள் கிட்டேயும் பேசி கன்வின்ஸ் பண்ணி ஒரு முடிவு எடுத்து அமைச்சர் பதவி பத்தி பேசறேன்' என்று கணேசனிடம் நான் சொன்னதும் உண்மைதான். அதன் படி பிரதமரிடம் பேசியதும் உண்மைதான்.

ம.தி.மு.க.,வும் அமைச்சரவையில் சேர கட்சியில் விரும்புறாங்கன்னு பிரதமரிடம் நான் சொன்னேன். அதற்கு பிரதமர் எந்த மறுப்பும் சொல்லாமல் ஒத்துக் கொண்டார். மூன்றாவது தடவை இந்த கோரிக்கையை சொன்னபோதுதான், "நீங்கள் (ம.தி.மு.க.,) அமைச்சரவையில் சேர வேண்டுமென்றால் தி.மு.க., தங்களது அமைச்சர்களை விலக்கிக் கொள்ள சொல்ல முடியுமா' என்று பிரதமர் என்னிடம் கேட்டார்.

எனக்கு அதிர்சியாய் இருந்தது. அவர்கள் எதற்கு விலக வேண்டும் என பிரதமரிடம் கேட்டேன். ."உங் கள் நான்கு எம். பி.,க்கள் கணக்கை சேர்த்து 20 எம். பி.,க் கள் கணக்கை காட்டி தி.மு.க., மத்திய அமைச்சர்களை பெற் றுள்ளது. தி.மு.க., வுக்குள் ம.தி.மு.க., ஒரு கூட்டணி வைத் துள்ளதாக சொல்லித்தான் தி.மு.க., அமைச்சர் பதவி வாங்கியதாக சோனியா என்னிடம் சொன் நார். நீங்கள் வேண்டுமானால் சோனியாவிடம் பேசுங்கள்' என்று பிரதமர் என்னிடம் சொன்னார்.

நான் சோனியாவைச் சந்தித்து கேட்டபோது, "ஆமாம், உண்மைதான்' என்று தெரிவித்தார். நான் அனைத்தையும் அவருக்கு விளக்கி விட்டு "இது பச்சை துரோகம்' என்று சொன்னேன். "இப்போது கருணாநிதியிடம் இது குறித்து நான் பேச முடியாது; இந்த விஷயத்தை நான் ஜீரணித்துக் கொள்கிறேன்' என்று சோனியா என்னிடம் அதிர்ச்சியாய் கூறினார். இந்த விஷயத்தை தமிழகம் எங்கும் தேர்தல் நேரத்தில் நூறு மேடையில் பேசினேன். அப்போது, "இது பொய். பிரதமரும், சோனியாவும் இதற்கு மறுப்பு தெரிவிப்பார்கள்' என்று தி.மு.க., தரப்பில் கூறினார்கள். ஆனால், தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வந்த சோனியாவும், பிரதமரும் இந்த குற்றச்சாட்டை மறுக்கவில்லையே. அவர்கள் என்னிடம் சொன்னதைத் தான் நான் மக்களிடம் சொன்னேன். இதை எப்படி அவர்கள் மறுப் பார்கள்? மத்திய அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக நான் நம்ப வைத்து ஏமாற்றியதாக கணேசன் சொன்னதால்தான் நடந்த விஷயங்களை முழுமையாக உங்களிடம் சொல்ல வேண்டி வந்தது.

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

ம.தி.மு.க., எம்.பி.,க்களை கணக்கு காட்டி தி.மு.க., அமைச்சர் பதவி பெற்றது என்ற வைகோவின் குற்றச்சாட்டு தொடரும் நிலையில் இதற்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்து முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செய்தி: தினமலர்

இன்ஜினியரை காப்பாற்றுங்கள் : பிரதமரிடம் வைகோ முறையீடு

சென்னை: "அசாம் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ இன்ஜினியரை பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும்," என்று பிரதமரிடம் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோருக்கு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சிவகாசி தாலுகா விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், மத்திய அரசின் சாலை அமைப்பு நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரை அசாமில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். பயங்கரவாதிகளிடம் இருந்து கணேசனை பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.

இதே விவகாரம் குறித்து நேற்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடமும் தொலைபேசி மூலம் வைகோ வலியுறுத்தினார்.

செய்தி: தினமலர்

Wednesday, December 27, 2006

மதிமுக-அதிமுக உறவு வலுப்படும்: வைகோ

டிசம்பர் 26, 2006

சென்னை: மதிமுக இரும்புக்கோட்டை போல கட்டுக்கோப்புடன் இருக்கிறது. அதிமுகவுடன் உறவு மேலும் வலுப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று நடந்த உயர் நிலைக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மதிமுக கட்டுக்கோப்பாக உள்ளது. எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரை நீக்கியதால் கட்சிக்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை.

எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் என்னைப் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள், வெறுப்பில் கக்கிய வார்த்தைகள். அதிமுகவுடன் மதிமுக கொண்டுள்ள உறவு வலுப்படும், மேலும் உறுதியாக இருக்கும்.

கட்சியின் சட்டத் திட்ட விதி 19(5)ன் கீழ் கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரது பதவிகளைப் பறிக்க பொதுச் செயலாளராகிய எனக்கு முழு அதிகாரமும் உள்ளது. இருவரின் பதவியைப் பறிக்கும் முடிவை யாருடைய தூண்டுதலினாலோ அல்லது கம்பத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலோ நான் எடுக்கவில்லை.

உயர்நீதிமன்றத்தில் எங்களது நிலையை விளக்க வாய்ப்பு தரப்படவில்லை. இந்தப் பிரச்சினையை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்.

எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் மூலமாக மதிமுகவுக்கு பெயரையும், புகழையும் களங்கப்படுத்த முதல்வர் கருணாநிதி முயலுகிறார் எனக்கு மிகுந்த நம்பகமான தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்தான் நான் கருணாநிதி மீது குற்றம் சாட்டினேன்.

இதற்காக என் மீது திமுக வழக்கு போடும் என ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார். அதை சட்டரீதியாக சந்திக்க நான் தயாராக உள்ளென். மதிமுகவிலிருந்து பலரையும் பிரிக்க நீண்ட நாட்களாகவே திமுக தரப்பு தனது முயற்சிகளைத் தொடங்கி விட்டது.

நான் மதிமுகவை அதிமுகவோடு இணைத்து விடப் போவதாகவும், அதிமுக அவைத் தலைவராகப் போவதாகவும் வதந்திகளைப் பரப்பினர். இதுகுறித்து திருச்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றியாளர்கள் கூட்டத்தில் நான் பேசுகையில், யாராவது மதிமுகவை அதிமுகவோடு இணைப்பதாக சொன்னால் அவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து தப்பி வந்தவர்கள் என நினைத்து மீண்டும் அங்கேயே அனுப்பி வையுங்கள் என்றேன்.

இந்த வதந்தியை மதிமுகவினர் நம்பவில்லை என்பதால் இது அடிபட்டுப் போனது. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி எம்.பி. டாக்டர் கிருஷ்ண்னை இழுக்கப் பார்த்தனர். அவரை தொடர்ந்து நான்கு நாட்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை, கப்பலில் ஓட்டை விழுந்து விட்டுவிட்டது, மாலுமி நம்முடன் வர மாட்டார். கப்பலோடு மூழ்கிப் போவார் என்று அவரிடம் கூறியுள்ளனர்.

மேலும், நாடாளுமன்றத்தில் எங்களை திமுக அணியில் அமர வையுங்கள் என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுக்க டிராப்ட் ரெடி செய்து விட்டதாகவும், அதில் கையெழுத்திட்டால் உங்களுக்கு நிறையப் பண்ம் கொடுப்பார்கள் என்று கூறியுள்ளனர்.

அத்தோடு நில்லாமல், வைகோவுக்கு வயதாகி விட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரது கரீஷ்மா போய் விட்டது. அதனால்தான் கேரளாவுக்குப் போய் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்றெல்லாம் பேசியுள்ளனர்.

இதையும் தாண்டி கிருஷ்ண்னுக்கு நெருக்கமான பொதுக்குழு உறுப்பினர் நல்லாம்பள்ளி நாச்சிமுத்து வீட்டுக்குப் போய் அவரை எங்கள் பக்கம் வரச் சொல்லுங்கள். கிருஷ்ண்னுக்கு ரூ. 15 கோடியும், உங்களுக்கு 1 கோடி ரூபாயும் தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

அதற்கு கிருஷ்ண்ன், நீங்கள் தரும் 15 கோடி ரூபாய், 15 ரூபாவுக்கு சமம் என்று கூறி விரட்டியடித்துள்ளார். இதை இன்றைய கூட்டத்தில் கிருஷ்ண்னே கூறினார்.

மதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை மிரட்டி எல்.கணேசன் அணியில் இணைக்க திமுக நேரடியாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. திமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் நேரடியாகவே அணுகி பேசி வருகின்றனர்.

முதலில் ஆசை வார்த்தை கூறுகிறார்கள், பணியாவிட்டால் மிரட்டுகிறார்கள், வழக்குகள் பாயும் என அச்சுறுத்துகிறார்கள்.

மதிமு.க என்று ஒரு கட்சி இருக்கிறதா என முன்பு முதல்வர் கருணாநிதி கேட்டார். அப்படிப்பட்டவர் இப்போது ஏன் மதிமுகவை அழிக்க தீரமாக பாடுபட வேண்டும்?. எனவேதான் இதுகுறித்து பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் நான் கடிதம் மூலம் தெரியப்படுத்தினேன்.

கருணாநிதிதான் கெஞ்சினார்:

பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு நான் கொண்டு வரப்பட்டபோது அங்கு என்னை வந்து முதல்வர் கருணாநிதி சந்தித்தார். எனது கைகளைப் பிடித்துக் கொண்டு பிரசாரத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும் என கெஞ்சினார். இதுதான் உண்மை.

அதை விடுத்து என்னை சிறையிலிருந்து வெளியே கொண்டு வாருங்கள் என நான் யாரிடமும் கெஞ்சவில்லை. யாருடைய உதவியையும் நான் நாடவில்லை. நான் ஜாமீனில் வெளியே வந்தபோது கூட அரை மனதுடந்தான் வந்தேன்.

அரசியலில் கருத்து வேறுபாடுகள் எழுவது சகஜமானதுதான். அதற்காக யாரும், யாரையும் அழித்து விட முடியாது.

இன்றைய (நேற்று) கூட்டம் கட்சியின் விதி 19(5), 35(14) ஆகியவற்றின் கீழ் எனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கூட்டப்பட்டது. இதை சீர்குலைக்க சிலர் முயன்றனர். சதித் திட்டங்களை தீட்டி வைத்திருந்தனர். ஆனால் அவை தங்களுக்கு எதிராக திரும்பி விடுமோ என்று பயந்து அந்த எண்ண்த்தை கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டு விட்டனர்.

எல்.ஜி.க்கு ஏன் அமைச்சர் பதவி தரவில்லை?

கட்சியின் பொதுக்குழு எடுத்த முடிவின்படிதான் எல்.கணேசனுக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்க நான் அனுமதிக்கவில்லை. ஆனால் எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தொடர்ந்து அமைச்சர் பதவி கேட்டு கோரி வந்ததால், நான் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இதுகுறித்துப் பேசினேன்.

அப்போது அவர்கள் மதிமுகவின் நான்கு எம்.பிக்களையும் கண்க்கு காட்டி திமுக அமைச்சர் பதவியைப் பெற்று விட்டதாகவும், அவர்களில் 2 பேரை திரும்பப் பெற்றால்தான் மதிமுகவுக்கு அமைச்சர் பதவி தர இயலும் என்றும் கூறி விட்டனர்.

அதற்கு நான் உடனடியாக, அது நம்பிக்கைத் துரோகம், பச்சைத் துரோகம். அதை நான் சகித்துக் கொள்கிறேன். அவர்களிடம் போய் அமைச்சர்களை வாபஸ் பெறுங்கள் என்று கேட்க மாட்டேன் என்றேன். மேலும், திமுக வேறு, மதிமுக வேறு என்பதையும் அவர்களிடம் தெளிவுபடுத்தினேன்.

எனது இந்தக் குற்றச்சாட்டை முதல்வர் கருணாநிதி இதுவரை மறுக்கவில்லை. விளக்க முன்வரவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் சென்னைக்கு பலமுறை வந்து சென்றுள்ளனர். அவர்களிடம் வைகோ இப்படிக் கூறுகிறாரே என்று விளக்கம் கேட்கவும் அவர் முன்வரவில்லை.

இப்போது தவிர்க்க முடியாத கட்டாயச் சூழ்நிலை வந்துள்ளதால் இவை எல்லாவற்றையும் செய்தியாளர்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்துகிறேன்.

மதிமுகவை நான் குடும்பக் கட்சியாக மாற்றுகிறேன், எனது தம்பி ரவிச்சந்திரனுக்கும், மகனுக்கும் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்பது உண்மைக்குப் புறம்பான பொய்யான குற்றச்சாட்டுக்கள்.

எனது மகன் துரை வையாபுரியை கட்சியில் முன்னிலைப்படுத்துவதாக திட்டமிட்டு செய்தி கிளப்புகிறார்கள். இதேபோல ஆண்டன் பாலசிங்கத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரை லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்தி பரப்பினர். இதனால்தான் எனது நடைபயண்த்தின்போது அவரையும் கலந்து கொள்ளச் செய்து மக்களுக்கு அவர் இங்கேதான் இருக்கிறார் என்பதை நிரூபித்தேன்.

எனது மகன் இதுவரை தாயகத்திற்கு இரண்டு முறை மட்டுமே வந்துள்ளார். நான் அவரை எம்.பி. ஆக்கப் போவதாக கூறுகிறார்கள். அப்படி செய்ய நினைத்திருந்தால் நான் போட்டியிடாத சிவகாசி தொகுதியிலேயே நிறுத்தி எம்.பி. ஆக்கியிருப்பேனே? எந்தக் காலத்திலும் எனது மகனை நான் கட்சிக்குள் கொண்டு வரப் போவதில்லை, பதவியும் தரப் போவதில்லை.

அதேபோல எனது தம்பி ரவிச்சந்திரனும் பதவிக்கு ஆசைப்படாதவர். பத்து கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அவரை பஞ்சாயத்துத் தலைவர் பதவியில் வற்புறுத்தி அமர வைத்தனர்.

தற்போது மதிமுக புத்துண்ர்ச்சியுடன் சிலிர்த்தெழுந்துள்ளது. தொண்டர்கள் அனைவரும் கட்சியின் பின்னால் நிற்கிறார்கள். மொத்தம் உள்ள 36 மாவட்டச் செயலாளர்களில் 32 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 3 பேர் பல்வேறு காரண்ங்களினால் வர முடியவில்லை. ஆனால் கூட்டத்தின் முடிவுகளை ஏற்பதாக சம்மதம் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டச் செயலாளர் தியாக பாரி மட்டுமே எந்தத் தகவலும் தரவில்லை.

அதேபோல உயர் நிலைக் குழுவில் உள்ளவர்களில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரனைத் தவிர மற்ற அனைவரும் வந்திருந்தனர். அரசியல் ஆலோசனைக் குழுவில் உள்ள 11 பேரில் 6 பேர் வந்திருந்தனர். அதேபோல அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் 7 பேரும் கலந்து கொண்டனர்.

என் மீது பழி சொன்னவர்கள் எங்கிருந்தாலும் வாழட்டும். இனிமேல் அவர்கள் சொல்லும் புகார்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை என்றார் வைகோ.

கோவையில் ஜன௰ல் பொதுகுழு கூட்டம்

மேலும் அவர் பேசுகையில், சென்னையில் நடந்த உயர் நிலைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வரும் 28ம் தேதி ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு அதில் விளக்கிச் சொல்லப்படும். ஜனவரி 10ம் தேதி கோவையில் அவசர பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்றார்.

எல்.கனேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் ஜனவரி 29ம் தேதி சேலத்தில் பொதுக் குழுவை கூட்டியுள்ள நிலையில் அவர்களை முந்திக் கொண்டு 10ம் தேதியே கோவையில் இக் கூட்டத்தை வைகோ கூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: thatstamil

'புஸ்' ஆன 'மாஜிகளின்' பாண்ங்கள்-வைகோ

டிசம்பர் 27, 2006

சென்னை: தாயகத்தை கைப்பற்றுவதை ஏற்க முடியாது என சோனியா அவசர எச்சரிக்கை விடுத்ததால் தான் கட்சியும் என் உயிரும் தப்பின என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து வைகோ கூறுகையில்,

எங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தை ரத்தக் களறி ஏற்படுத்தி கைப்பற்ற திட்டம் தீட்டப்பட்டிருந்தது. மாநகராட்சித் தேர்தலில் குண்டர்களை ஏவி விட்டது போல தாயகத்தையும் ரெளடிகளை விட்டு கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்தது.


ரத்தக் களறி ஏற்பட்டால் சிந்தப்படும் முதல் சொட்டு ரத்தம் என் குடும்ப ரத்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதனால் தான் 2 முறை மட்டுமே இதுவரை தாயகத்துக்கு வந்திருந்த என் மகன் துரை வையாபுரியை முதல் ஆளாக தொண்டர்களோடு தொண்டராக உட்கார வைத்தேன்.

அவரோடு என் குடும்ப உறுப்பினர்களும் வந்து உட்கார்ந்தார்கள். மற்ற கட்சிகளில் பதவி சுகத்துக்காக வாரிசுகளை கட்சி அலுவலகத்துக்கு கொண்டு வந்தார்கள். நான் ரத்தம் சிந்த அழைத்து வந்தேன். என் தொண்டர்களையும் கட்சியையும் நான் என் குடும்பத்துக்கு மேலாக மதிக்கிறேன். இதைத் தான் குடும்ப அரசியல் என்கிறார் செஞ்சியார்.

மதிமுக கட்சி அலுவலகத்தை கைப்பற்றவும் கட்சியை உடைக்கவும் நடக்கும் முயற்சிகள் குறித்து பிரதமருக்கும் சோனியா அம்மையாருக்கும் கடிதம் எழுதினேன். நான் அனுப்பிய கடிதம் கிடைத்தபோது பிரதமர் கொல்கத்தாவில் ஒரு விழாவில் இருந்தார். இருந்தாலும் கடிதததை படித்தார்.

அதே போல சோனியாவும் படித்ததாக எனக்கு தகவல் வந்தது. இருவரிடம் இருந்து வந்த தகவலில் கட்சியை உடைப்பது, அலுவலகத்தை கைப்பற்றுவது அநாகரீகச் செயல், பொறுத்துக் கொள்ள முடியாது என இருவரும் குறிப்பிட்டிருந்தனர்.

அதே போல எனக்கு எதிரானவர்களுக்கும் (திமுக?) சோனியா அவசர எச்சரிக்கை விடுத்தார். இதனால் என் கட்சி அலுவலகம் மீதும் என் மீதும் நடக்க இருந்த குண்டர் படை தாக்குதல் தவிர்க்கப்பட்டு, கட்சியும் என் உயிரும் தப்பின.

இந்த பிரச்சனை குறித்து ஜெயலலிதாவும் அக்கறையுடன் பேசினார். பல விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார்.

எ.ஜியும் செஞ்சியும் மந்திரி பதவி கேட்டு தொல்லை தந்ததால் பிரதமரிடம் பேசினேன். ஆனால், மதிமுக எம்பிக்களையும் கண்க்கில் காட்டித் தான் திமுக அமைச்சர் பதவிகளைப் பிடித்ததாக சோனியாவும் பிரதமரும் கூறிவிட்டனர்.

கடந்த 27ம் தேதி சிஐடி நகரில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு எல்.ஜியும் செஞ்சியும் சென்றனர். அதன் பிறகே பல திட்டங்கள் போடப்பட்டன.

சேலத்தில் எல்.ஜியும் செஞ்சியும் நடத்தப் போகும் கூட்டம் வெறும் சாதாரண்க் கூட்டமாகத் தான் இருக்கும். திமுகவின் ஏற்பாட்டில் நடக்கும் ஒரு கூட்டம் அது. அந்த அற்பக் கூட்டத்துக்கு மதிமுக பொதுக் குழுக் கூட்டம் என்று பெயர் சூட்டுவது வெட்கக்கேடு என்றார் வைகோ. மாஜிக்களின் புஸ்வானங்கள்:

இந் நிலையில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1993ம் ஆண்டு திமுகவில் குழப்பம் விளைவித்து அண்ணா உருவாக்கிய இயக்கத்தை நான் சீர்குலைக்க முயன்றதாக முதல்வர் கருணாநிதி பழி சுமத்தியுள்ளார்.

கொலையிலும் கொடிய பழி என் மீது சுமத்தப்பட்டதைத் தாங்க முடியாமல் தான் திமுகவினர் 5 பேர் தீக்குளித்து மடிந்தனர். என் மீது பழி சுமத்தி, என் பொது வாழ்வுக்கு களங்கம் சுமத்தியதைக் கூட சகிக்கலாம். ஆனால், தமிழ் ஈழ மக்களை காக்கவும் உரிமை பெறவும் உயிர்த் தியாகம் செய்து போராடி வரும் புலிகள் மீது கருணாநிதியைக் கொலை செய்ய திட்டமிட்டதாக பழி சுமத்தியது தான் கொடுமையிலும் கொடுமை.

2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் என் வீட்டுக்குள் நுழைந்து என்னைத் தாக்கவும் கலவரம் செய்ய திட்டமிடப்பட்டது. என் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்ற சூழலில் பிரதமரிடம் அதிமுக, மதிமுக எம்பிக்கள் நேரில் மனு கொடுத்தனர்.

இதனால் என் மீது ஒரு கொடூரமான புகாரை தயார் செய்து திமுக எம்பிக்கள் மூலம் பிரதமரிடம் தரச் செய்தார்கள். அதில் 93ம் ஆண்டிலேயே புலிகளைக் கொண்டு கருணாநிதியைக் கொலை செய்ய முயன்றவன் வைகோ, இப்போதும் வைகோவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு, கருணாநிதியின் பேரனான தயாநிதி மாறனுக்கு வைகோவால் ஆபத்து என்றும், இதனால் வைகோவின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்றனர்.

எல்.கணேசன், கடந்த 14ம் தேதி நாடாளுமன்றத்தில் கருணாநிதியை பாராட்டி பேசியதால் எனக்கு கோபம் என்கிறார்கள். அதை நான் பொருட்படுத்தவே இல்லை. ஏனென்றால் சட்டமன்ற தேர்தல் முடிந்த உடனே எல்ஜியும் செஞ்சியும் திமுக வலையில் விழுந்துவிட்டனர். மதிமுகவை வீழ்த்த சூழ்ச்சிப் படலத்தையும் தொடங்கிவிட்டனர்.

சேலத்தில் இந்த மாஜிக்கள் இருவரும் கூட்டியிருக்கும் கூ"டடத்துக்கு ஆள் பிடிக்கும் வேலை நடந்து வருகிறது. ஒவ்வொரு பொதுக் குழு உறுப்பினரிடமும் 2 லட்சம் தருகிறோம், 5 லட்சம் தருகிறோம், அரசு காண்ட்ராக்ட்கள் தருகிறோம் என பேரம் பேசுகின்றனர்.

சேலம் கூட்டத்தில் திமுகவினரையே பெருமளவில் கலந்து கொள்ளச் செய்து பெரும்பான்மையான பொதுக் குழு உறுப்பினர்கள் இந்த மாஜிக்கள் பக்கம் இருப்பதாக அறிவித்து அதற்கு அடுத்த கட்டமாக மீண்டும் தாயகத்துக்குள் நுளைய முயற்சி செய்கிறார்கள்.

93ல் நாங்கள் தான் உண்மையான திமுக என நான் போராடியது உண்மை. ஆனால், அறிவாலயத்தை கைப்பற்ற திட்டமிட்டதும் இல்லை அந்த முயற்சியை செய்ததும் இல்லை. கோடிகள் உங்களோடு இருக்கட்டும், கொள்கை எங்களோடு இருக்கட்டும் என்று தான் சொன்னேன்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என ஆணித்தரமாக வாதாடியவர் எல்.கணேசன். அதை மறுக்காமல் உடன்பட்டவர் தான் இந்த செஞ்சி ராமச்சந்திரன்.

இந்த இருவரும் இப்போது ஏவிவிடும் பாண்ங்கள் எல்லாம் வெறும் புஸ்வானங்கள் தான் என்று கூறியுள்ளார் வைகோ.

செய்தி: thatstamil

Monday, December 25, 2006

கேரளத்தின் புதிய அணை யோசனை வஞ்சகமானது: வைகோ பெச்சு

தேனி, டிச. 25: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், கேரள முதல்வர் அச்சுதானந்தன் புதிய அணை கட்டச் சொல்ளும் யோசனை வஞ்சகமானது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணை உரிமை பாதுகாப்பு கோரி மதுரையிலிருந்து டிச.18-ம் தேதி தொடங்கிய நடைபயணத்தை 6-வது நாளான சனிக்கிழமை இரவு கூடலூரில் நிறைவு செய்து பொதுக் கூட்டத்தில் அவர் பெசியது:

உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த, கடமை தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், புதிய அணை கட்ட வேண்டிய அவசியமில்லை, மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு செல்லத் தேவையில்லை, ஏற்கனவே கொடுத்த தீர்ப்பை அமல்படுத்தி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மேற்கொண்ட நடைப்பயணத்தின் நோக்கம் வெற்றியடைந்துள்ளது.

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அதிமுக வழக்குத் தொடர்ந்து, நியாயமான வாதங்களை எடுத்துரைத்ததின் அடிப்படையில் 142 அடியாக உயர்த்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஆனால், கேரள முதல்வர் அச்சுதானந்தன் தில்லியில் முகாமிட்டு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நீர்மட்டத்தை உயர்த்தினால் அணை உடைந்து விடும் என்று பொய்யான தகவல்களைத் தெரிவித்தார்.

இந்த பொய்யான பிரசாரத்தை தமிழக முதல்வர் கருணாநிதி தில்லி சென்று பிரதமரைச் சந்தித்து உண்மை நிலையை விளக்கி சொல்ல தவறியதன் விளைவே பெச்சுவார்த்தைக்கு பிரதமர் பரிந்துரை செய்தது.

கேரள அரசு பெரியாறு அணை குறித்து பொய்யான தகவல்களை தமிழ் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது, இதை மறுத்து தமிழக அரசு மலையாள பத்திரிகைகளில் ஏன் விளம்பரம் செய்யவில்லை.

அணை உடையும் என்றால் உறவுகள் உடையும். பொய்யைச் சொல்லி உரிமையைப் பறிக்க கேரளம் முயற்சிக்கிறது. ஆனால் தமிழக மக்களுக்கு சட்டப்படி உரிமை உள்ளது.

பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி கடமை தவறி விட்டார். இது தமிழ்நாட்டிற்கு செய்த துரோகம். நன்றி: தினமலர்

நன்றி: தினமணி

6 நாட்கள் வைகோ "நடந்தது...' என்ன?

பெரியாறு அணை பிரச்னையில் போதிய விழிப்புண்ர்வு மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் எழவில்லை என்ற குறை இருந்தது. எனவே விழிப்புண்ர்வையும், எழுச்சியையும் ஏற்படுத்த வைகோ, மதுரையில் இருந்து கூடலூர் வரை ஆறு நாள் உரிமை காப்பு நடைபயண்த்தை கடந்த 18ம் தேதி தொடங்கினார்.

பொதுவாக வைகோ நடைபயண்ம் என்றாலே தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். இம்முறையும் அதே பரபரப்பு தொற்றிக் கொண்டதால், அவரது பேச்சு மூலம் ஆக்ரோஷமான கருத்துக்கள் வெளிப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து அரசியல் கட்சிகள் தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.



முதல் நாள்: 18.12.06

மதுரையில் இருந்து புறப்பட்ட வைகோ அச்சம்பத்து, நாகமலை புதுக்கோட்டை, ராஜன்பாடி, வடபழஞ்சிவிலக்கு வழியாக செக்கானூரணி வந்து, பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு இரவு அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் தங்கினார். அவரது இரவு உண்வு இரண்டு இட்லி, ஒரு ஊத்தப்பம் மட்டுமே. அதன் பிறகு உறங்கச்சென்றுவிட்டார். நடந்து வந்த களைப்பில் உடன் வந்த தொண்டர்களும் மண்டபம் ஒன்றில் தூங்கினர்.

இரண்டாம் நாள்: 19.12.06

காலை 5.30 மணிக்கு முன்பே எழுந்து அனைத்து நாளெடுகளையும் படித்து முடித்தார். தொண்டர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல், இட்லியை சாப்பிட்ட பின்னர் காலை 10.30 மணிக்கு செக்கானூரணியில் இருந்து புறப்பட்டு கொக்குளம்பிரிவு, ஒத்தப்பட்டிபிரிவு, மூணாண்டிபட்டி வழியாக கருமாத்தூர் வந்தபோது அருள் ஆனந்தர் கல்லூரி முன்பாக மாண்வர்கள் காத்திருந்து, வைகோவை வரவேற்றனர். நத்தம்பட்டி முன்பாக வைகோ நடந்து வந்தபோது வெகுதொலைவில் வயல்களில் வேலை செய்தவர்கள் ஓடி வந்ததை பார்த்து அங்கேயே 15 நிமிடம் வைகோ நின்று விட்டார். ஓடி வந்தவர்கள் வந்து சேர்ந்ததும் அவர்கள் கூறிய குறைகளை காதுகொடுத்து கேட்டார்.

செல்லம்பட்டியை கடந்த போது "ஆல் இந்தியா ரேடியோ' விற்கு நடந்து கொண்டே பேட்டியளித்தார். வாலாந்தூரை நெருங்கும்போது மொபைல் போன் அழைப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. அனைத்திற்கும் நடந்து கொண்டே பதில் கொடுத்தார். அப்போதுதான் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் வைகோவிற்கு எதிராக கருத்துகள் வெளியிட்டது குறித்த பரபரப்பு தொற்றிக்கொண்டது.

சிறிது நேரத்தில் ஜெயா "டிவி'யில் இருந்து பேட்டி கேட்டபோது துவக்கத்தில் சாதாரண்மாக பதில் அளித்தார். கணேசன் பற்றி கேட்டபோது, சற்று "டென்ஷனாக' காண்ப்பட்டார். ஆனாலும் "சட்டென' சமாளித்து அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளிக்கத் துவங்கினார். இரவு உசிலம்பட்டியில் வைகோ தங்கினார்.



மூன்றாம் நாள்: 20. 12. 06

காலையில் பொங்கல் மட்டும் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டபோது, அவரை நிருபர்கள் சூழ்ந்து, இரண்டு எம்.பி.,க்கள் கூறிய கருத்துகள் குறித்து கேட்டனர். "எண்ண்ற்ற தடைகளை கடக்க வேண்டி உள்ளது'. என ஒருவரி பதிலை கூறிவிட்டு நடைபயண்த்தை துவக்கினார். மாகரையை கடக்கும் போது வெயில் சற்று "சுள்ளென்று' அடிக்கவே தலையில் உருமா கட்டிக் கொண்டார். மதிய உண்வு தொண்டர்களுடன் தொண்டராக ஆண்டிபட்டி கண்வாய் வேளாங்காண்ணி மாதா சர்ச் பகுதியில் அமர்ந்து சாப்பிட்டார். சற்று நேர ஓய்வுக்குப்பின் புறப்பட தயாரானபோது நிருபர்களிடம் "விசேஷம் ஏதும் இல்லை' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

சாஸ்தா கோவிலில் பூசாரி விபூதி, சந்தனம் தந்தார். சந்தனத்தை மட்டும் எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டார். எனவே, பூசாரி விபூதியை நெற்றியில் வைத்தார். அதன் பின்னர் சிறிது தூரம் வந்ததும் விபூதியை வைகோ அழித்துவிட்டார். கணேசன் பிரச்னை உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இடையிடையே மொபைல் போனில் ஏராளமான அழைப்புகள் வந்தபோதும் சளைக்காமல் பதில் கூறிக்கொண்டு வந்தார். ஆண்டிபட்டி வந்த வைகோ நேராக பொதுக்கூட்ட மேடைக்கு சென்று விட்டார். கூட்டம் முடிந்ததும் இரவு தங்க உள்ள வீட்டிற்கு நடந்தே சென்றார். அ.தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்திருந்த சைவ உண்வை சாப்பிட்டார்.

நான்காம் நாள்: 21.12.06

தினமும் நடைபயண்ம் துவங்கும் போதும் தொண்டர்கள் கொடுக்கும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு பயண்த்தை துவக்கினார். ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தேனி நோக்கி புறப்பட்டார், வழியில் எந்த இடத்திலும் ஓய்வு எடுக்கவில்லை. எதிர் வெயில் முகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய போதும், வெள்ளைத் துண்டால் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு பயண்த்தை தொடர்ந்தார். முன்னதாக சென்ற பிரசார ஜீப்பில் எம்.ஜி.ஆர்., பட தத்துவப்பாடல்கள் விடாமல் ஒலித்துக்கொண்டே இருந்தன.

குன்னூரில் வைகோ மகன் வையாபுரி நடைபயண்த்தில் இணைந்து கொண்டார். மதிய உண்விற்குப் பின் மாவட்ட செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாலையில் தேனி பொதுக்கூட்டத்தில் பேசிய போது, அருகில் வைகோ குடும்பத்தினர் வேனில் அமர்ந்தவாறு பேச்சை கேட்டனர். அவர்களது முகங்களில் லேசான சோகம் காண்ப்பட்டாலும், மன உறுதியும், நெஞ்சுரமும் கொண்ட வைகோ, மேடையில் "கணீர்' குரலில் பேச்சை தொடர்ந்தார். பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் வீரபாண்டி சென்று உடன் வந்த 15 மாவட்ட செயலர்களுடன் நள்ளிரவு 2 மணி வரை ஆலோசனை நடத்தினார்.

ஐந்தாம் நாள்: 22.12.06

காலையிலேயே சற்று "டென்ஷனாக' காண்ப்பட்டார். இருந்த போதும் 10.15 மணிக்கு நடைபயண்த்தை துவக்கினார். வழிநெடுக அதிக அளவில் விவசாயிகள் திரண்டு வரவேற்றனர். சின்னமனூரில் மதிய உண்வையும் தொண்டர்களோடு அமர்ந்து சாப்பிட்டார். இடையே "தாயகத்தில்' இருந்து மொபைலில் அழைப்பு வரவே, சாப்பிட்ட கையை கழுவாமல் 20 நிமிடம் நின்று கொண்டே பேசினார். நடைபயண்த்தில் தி.மு.க., கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலால் சற்று "டென்ஷன்' அடைந்தார். பின்னர் மாலை 5 மணிக்கு புறப்பட்டு உத்தமபாளையம் நோக்கி நடந்தார். வயல்வெளிகளில் நாற்று நடுதல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த பெண்கள் வைகோவை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இரவு உத்தமபாளையத்தில் பொதுக்கூட்டம் முடித்து அரசு பொதுப்பணித்துறை விடுதியில் தங்கினார்.

ஆறாம் நாள்: 23.12.06

உத்தமபாளையத்தில் காலை 9.45 மணிக்கு துவங்கி அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி வழியாக கம்பத்தை நோக்கி வந்த போது, நிறைவு நாள் நடைபயண்ம் என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ம.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் சேர்ந்து கொண்டதால் மூன்று கி.மீ., தூரத்திற்கு நடைபயண்ம், ஊர்வலமாக மாறியது. கம்பத்தில் மதியம் நடந்த பொதுக்கூட்டத்தில் "தாயகம்' குறித்து பேசும்போது உண்ர்ச்சிவசப்பட்டு, கண் கலங்கினார்.

மதிய உண்வுக்குப்பின் மாவட்ட செயலர்கள், மாநில கட்சி நிர்வாகிகளை வைத்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ள நிலையில் "பரபரப்பு' தொற்றிக்கொண்டது.

கம்பம் நடராஜன் திருமண் மண்டபத்தில் கூட்டம் நடத்தப்பட்டு கணேசன், ராமச்சந்திரனும், அவர்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள தகவலை நிருபர்களிடம் வைகோ அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன் பிறகு நடைபயண்த்தை துவக்கி, இரவு 10 மணிக்கு கூடலூரில் நிறைவு செய்தார்.

மருத்துவ சோதனை:

நடைபயண் குழுவுடன் முதலுதவிக்காக மருத்துவ குழுவினர் காரில் பின் தொடர்ந்து வந்திருந்தனர். ஆறு நாளும் நடைபயண்த்தை துவக்கும் போதும் இரவு ஓய்வு எடுக்கும் போதும், வைகோ மருத்துவசோதனை செய்து கொண்டார். மதுரையில் நடையை துவக்கியபோது என்ன வேகம் இருந்ததோ, அதே வேகம் கூடலூரில் நிறைவு செய்யும் வரை தொடர்ந்தது. இரண்டு எம்.பி.,க்கள் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சி காரண்மாக கடைசி நான்கு நாட்களும் வைகோ "டென்ஷனாகவே' காண்ப்பட்டார். இருந்த போதிலும் அடுத்தடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், இரண்டு எம்.பி.,க்களுக்கு பின்னணியில் உள்ளவர்கள் நகர்த்தும் "காய்களை' எங்கெங்கு "வெட்ட' வேண்டும் என்பதில் அவர் மிகத்தெளிவாக இருந்தார் என்பதற்கு, மொபைல் போன்களில் கட்சி நிர்வாகிகளுக்கு அவர் அடுத்தடுத்து அளித்த உத்தரவுகளெ உதாரண்ம்.


எழுச்சியும், வெற்றியும் இணைந்த நடைபயண்ம்


  • வைகோ செல்லும் வழியில் அவரை காண்வும், பேச்சை கேட்கவும் பொதுமக்களும், விவசாயிகளும் ரோட்டோரம் ஏராளமாக கூடினர். ஆனால், அவர்களிடம் வைகோ "பரபரப்பான" அரசியல் பேச விரும்பவில்லை. தனது நடைபயண்த்தின் நோக்கம் குறித்து மட்டுமே பேசினார்.
  • சீனப்பெருஞ்சுவர், எகிப்து பிரமிடுகள், காவிரி கல்லணை எந்த தொழில் நுட்பத்தின் படி கட்டப்பட்டதோ அதே தொழில்நுட்பத்தின் படி பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை இன்னும் ஐந்தாயிரம் ஆண்டுகள் ஆனாலும் உடையாது என்ற கருத்தை சென்ற இடங்கள் தோறும் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
  • பெரியாறு அணை நீர் இல்லை என்றால் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்க்கையே சிக்கலாகி விடும் என்ற வைகோவின் எச்சரிக்கை மக்கள் மனதிலும், விவசாயிகளின் மனதிலும் ஆழப்பதிந்து விட்டது.

இனிவரும் காலங்களில் ஐந்து மாவட்டங்களை பொறுத்தவரை பெரியாறு அணை பிரச்னையை சரியான முறையில் கையாளாத எந்த அரசியல் கட்சியும், மக்களிடம் அங்கீகாரம் பெற முடியாது என்ற நிலையை இந்த நடைபயண்த்தில் மூலம் வைகோ உருவாக்கி விட்டார். அவரது நடைபயண்ம் மூலம் பெரியாறு அணை பிரச்னை குறித்து தெளிவான விழிப்புண்ர்வு ஏற்பட்டுள்ளது. வைகோ மெற்கொண்ட நடைபயண்ம் எழுச்சி பயண்மாக மட்டுமல்ல, வெற்றிப் பயண்மாகவும் நிறைவடைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

நன்றி: தினமலர்

திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும்: வைகோ அறிவிப்பு

சென்னை: ""தி.மு.க.,வின் தூண்டுதலைக் கண்டு பயப்படுபவர்கள் நாங்கள் அல்ல. கருணாநிதியின் வஞ்சக வலையில் விழுந்த எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் இருவருக்காகவும் அனுதாப்படுகிறேன்,'' என ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறினார்.


சென்னை மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ நேற்று மதியம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது :

நானும், என் தொண்டர்களும் உருவாக்கிய இயக்கம் ம.தி.மு.க., தியாகத்தாலும், உழைப்பாலும் வளர்ந்த இந்த இயக்கத்தை எப்படியாவது உடைக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி முயற்சித்து வருகிறார். இவர்களின் வஞ்சக வலையில் விழுந்துள்ள எல்.கணேசன், செஞ்சி ராமசந்திரன் ஆகிய இருவருக்காகவும் வேதனைப்படுகிறேன், அனுதாப்படுகிறேன். கடந்த ஐந்து மாத காலமாக எங்கள் இயக்கத்தை நிர்மூலமாக்க 10 பேர் விலகினாலும், 10 ஆயிரம் பேர் விலகி தி.மு.க.,வில் இணைந்தது போன்று பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.

திட்டமிட்டபடி 25ம் தேதி(இன்று) தாயகத்தில் மாவட்ட செயலர்கள், உயர்நிலை குழு உறுப்பினர்கள், தலைமை கழக செயலர்கள், ஆய்வு மைய உறுப்பினர்கள், ஆட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும். அவைத் தலைவர் எல்.கணேசன், துணை பொது செயலர் செஞ்சி ராமசந்திரன் ஆகியோர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். எனினும், அடிப்படை உறுப்பினர்களாக நீடிப்பர்.

தாயகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு தி.மு.க.,வின் குண்டர் படைகள் எங்கள் கட்சியின் கரைவேட்டிகளுடன் நுழைந்து கலவரம் செய்யப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. தாயகத்திற்கு தொண்டர்கள் வரும் போது கலவரம் செய்ய வருகிறார்கள் என்று தடுத்துவிட்டு, கேடிகளையும், போக்கிரிகளை வைத்து கூட்டத்தை சீர்குலைக்க முடிவு செய்துள்ளனர்.

இவர்களின் ஆராஜகத்தை பற்றி பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோருக்கு பேக்ஸ் மூலம் தகவல் அனுப்பியுள்ளென். தி.மு.க.,வில் நீண்டகால நல்ல தொண்டர்கள், பொறுப்புள்ள உறுப்பினர்களுக்கு ஒன்றை மட்டும் கூறுகிறேன். உங்களுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. தயவு செய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். நான் பயத்தினால் சொல்லவில்லை, அன்பினாலும், கடந்த கால பாசத்தினாலும் சொல்கிறேன். 13 வருடங்களாக எந்த வன்முறையிலும் ஈடுபடாமல் நாங்கள் கட்டுக்கோப்போடு ராணுவத்திற்கும் மேலாக சிறு சச்சரவும் இல்லாமல் இயக்கத்தை நடத்தி வருகிறோம்.

எத்தனையோ நடைபயண்ம், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டம் நடத்தியபோதும் எங்களால் யாருக்கும் சிறு கஷ்டமும் ஏற்படவில்லை என்பதை மக்கள் அறிவர். எனது தாயகம் ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி தொண்டர்கள் கொடுத்த ரூ.5, ரூ.10 நிதியால் கட்டப்பட்டது. அந்த தாயகத்தில் கலகம் செய்ய முயற்சிக்கும் கருணாநிதிக்கு ஒன்றை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன்.

தாயகத்தில் எந்தவித சிறு அசம்பாவிதம் நடந்தாலோ, கலவரம் செய்ய முயன்றாலோ, எங்கள் கட்சி கரை வேட்டியுடன் உள்ளெ நுழைந்து வன்முறையில் ஈடுபட்டால் அதை நாங்கள் அறவழியில் சந்திப்போம். மாநகராட்சி தேர்தலில் நடந்த ஜனநாயக படுகொலையை போல இப்போதும் காவல் துறையின் துணையோடு கூட்டத்தை தடுக்க திட்டம் தீட்டி வருகின்றனர். இதை எல்லாம் பார்த்து நாங்கள் பயந்து விட மாட்டோம். எங்களுக்கு பின்னால் லட்சக்கண்க்கான உண்மை தொண்டர்கள் உள்ளனர்.

இவ்வாறு வைகோ கூறினார்.

அப்போது துணை பொது செயலர் சத்யா, சீமாபஷீர், வடசென்னை மாவட்ட துணை பொது செயலர் ஏசுராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ம.தி.மு.க.,வினரிடம் பேரம் நடத்தும் தி.மு.க.,

வைகோ கூறுகையில், ""தமிழகத்தில் உள்ள மாவட்ட செயலர்கள், உயர்நிலை குழு உறுப்பினர்கள், நிர்வாகிகளின் வீட்டிற்கு மாவட்ட அமைச்சர்கள், தி.மு.க., மாவட்ட செயலர்கள் சென்று எத்தனை லட்சம் வேண்டும், எந்த கான்ட்ராக்ட் வேண்டும், நாங்கள் தருகிறோம், நீங்கள் சேலத்தில் நடக்கும் எல்.கணேசன் கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று பேரத்தை துவக்கியுள்ளனர். கட்டுக்கோப்பான ம.தி.மு.க.,வினர் ஒருபோதும் பேரத்துக்கு அடிபணிய மாட்டார்கள்,'' என்றார்.

செய்தி: தினமலர்

Sunday, December 24, 2006

திரை அரங்குகளில் கட்டணம் குறைப்பு.

மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏற்றி விட்டு, திரைபடங்களுக்கு கேளிக்கை வரிகளை ரத்து செய்வது, திரை அரங்குகளில் கட்டணங்களை குறைப்பது என திரை துறைக்கு மட்டுமே உதவி செய்யும் தமிழக முதல்வர் கருணாநிதி, தன்னை உலகிற்கு அடையாலம் காட்டிய திரையுலகிற்கு தன் நன்றி கடனை செலித்தி விட்டு, தன்னை நம்பி வாக்களித்து முதல்வர் பதவியில் அமர வைத்த மக்களை ஏமாற்றி வருகிறார். கலைஞரே வாழ்த்துக்கள்!

Saturday, December 23, 2006

ஆட்கள வராமல் அசிங்கப்பட்ட எல்.கணேசன்

நிர்வாகிகள் வரவில்லை-எல்.ஜி. கூட்டம் ரத்து

திருச்சியில் இன்று மதிமுக அவைத்தலைவரும், திருச்சி எம்பியுமான எல்.கணேசன் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

வைகோவுக்கு எதிராக எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் தங்கள; கருத்துகளை தெரித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் இருந்து எல்.கணேசன் நேற்று சென்னை வந்து தனது ஆதரவாளர்களுடம் ஆலோசனை நடத்தினர்.

சென்னையில் ஆலோசனை நடத்தி விட்டு இன்று காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் மூலம் திருச்சி வந்தார். ஆனால் அவரை வரவேற்க திருச்சி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் யாரும் வரவில்லை. தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட புற மாவட்டங்களில் இருந்து 10 நிர்வாகிகள் மட்டுமே அவரை வரவேற்றனர்.

இதனால் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்திருந்த எல்.கணேசன் திருச்சி கூட்டத்தை ரத்து செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து தஞ்சையில் ஆலோசனை நடத்த அங்கு புறப்பட்டு சென்றார்.

நன்றி - thatstamil

வைகோவின் 6 நாள் நடைபயண்ம் கூடலூரில் இன்று நிறைவடைகிறது

முல்லை பெரியாறு உரிமை காப்பு நடை பயண்ம் மேற்கொண்டுள்ள வைகோ, 6ம் நாளான இன்று தேனி மாவட்டம் கூடலூரில் நிறைவு செய்கிறார்.

முல்லை பெரியாறு உரிமை காப்பு நடைபயண்த்தை கடந்த 18ம் தேதி மதுரையில் துவக்கிய வைகோ, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக நேற்று முந்தினம் தேனி வந்தார். தேனியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் வீரபாண்டி சென்று தங்கினார். நேற்று காலை, கோட்டூர், சீலையம்பட்டி வழியாக சின்னமனூர் வந்து சேர்ந்தார். மதிய உண்வை முடித்த பின்னர் இரவு 7 மணிக்கு உத்தபாளையம் வந்தடைந்தார். அங்கு பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார். இன்று காலை உத்தமபாளையத்தில் இருந்து புறப்பட்டு, அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி வழியாக கம்பம் செல்லும் வைகோ, கடந்த 6 நாட்களாக மேற்கொண்ட நடைபயண்த்தை கூடலூரில் நிறைவு செய்கிறார். இந்நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த கட்சி நிர்வாகிகள் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

நடைபயண்த்தில் நேற்று, பொருளாளர் கண்ண்ப்பன், நாஞ்சில் சம்பத், தேனி மாவட்ட செயலர் ராமகிருஷ்ண்ன், எம்.எல்.ஏ.,க்கள் வரதராஜன், வீர இளவரசன், ஞானதாஸ், திருமலைக்குமார், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் அழகுசுந்தரம், துணை பொதுச் செயலர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர்.

நடைபயண்ம் இன்றுடன் முடிவடைவதால் திருவாரூர் மாவட்ட செயலர் தியாகபாரி தவிர மற்ற அனைவரும் வந்துள்ளனர். தற்போதைய கட்சி பிரச்னையில் மாவட்ட செயலர்கள் அனைவரும் வைகோ பின்னால் உள்ளனர் என்பதை நிரூபிக்கும் வகையில் இன்று நடைபெறும் நடைபயண் நிறைவு நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கின்றனர்.

நன்றி தினமலர்




மதுரையிலிருந்து கூடலூர் வரை பெரியாறு அணை உரிமை காப்பு நடைப்பயண்ம் மேற்கொண்டு, 5-வது நாளாக வெள்ளிக்கிழமை தேனி மாவட்டம் கோட்டூர் அருகே, விவசாயி போஸ் என்பவரது தோட்டத்தில் வாழைக் கன்று நட்டு, மண்வெட்டியால் மண்ணை அணைக்கிறார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.


உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக்கோரி, மதிமுக பொதுச் செயலர் வைகோ மேற்கொண்டுள்ள பெரியாறு உரிமை காப்பு நடைப்பயண்ம் கூடலூரில் சனிக்கிழமை இரவு நிறைவடைகிறது.

நடைப்பயண்த்தை டிச. 18-ம் தேதி மதுரையிலிருந்து தொடங்கினார் வைகோ. உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக வியாழக்கிழமை இரவு வீரபாண்டிக்கு வந்தார்.

அங்கிருந்து வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்குப் புறப்பட்டு சின்னமனூருக்கு சென்று கொண்டிருந்தார். கோட்டூர் அருகே தோட்டத்தில் வாழைக் கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயி போஸ் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வைகோவை வரவேற்றனர்.

சாலையோர தோட்டத்திற்கு அழைத்துச் சென்று வாழைக் கன்றுகளை நடும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து வாழைக் கன்றுகளை வைகோ நட்டார்.

இதைத் தொடர்ந்து கோட்டூர் வழியாக சீலையம்பட்டிக்கு புறப்பட்டார். அப்போது தள்ளுவண்டியில் இளநீர் விற்பனை செய்து கொண்டிருந்த ஊனமுற்ற ரவி என்பவர் அவருக்கு இளநீர் கொடுத்து வரவேற்றார்.

கோட்டூர், சீலையம்பட்டி ஆகிய ஊர்களில் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் பெரும் திரளாக நின்று வைகோவை வரவேற்றனர்.

அவருடன் மதிமுக மாவட்டச் செயலர் கம்பம் ராமகிருஷ்ண்ன் எம்.எல்.ஏ,, எம்.பி.க்கள் சிவகாசி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், பொள்ளாச்சி கிருஷ்ண்ன், தேனி பொன்முடி, நகரச் செயலர் சேகர் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் சென்றனர்.

ஆறாவது நாளான சனிக்கிழமை காலை 10 மணிக்கு உத்தமபாளையத்திலிருந்து பயண்த்தை தொடங்கி பகல் 12 மணிக்கு கம்பம் சென்றடைகிறார், அங்கு பொதுக்கூட்டத்தில் பெசுகிறார்.

இன்று நிறைவு: நடைப்பயண்த்தை கூடலூரில் சனிக்கிழமை இரவு நிறைவு செய்கிறார் வைகோ. அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பெசுகிறார்.
நன்றி தினமணி.

எல்.கணேசனும், செஞ்சியாரும் வெளியேற்றபடுவர்.

அதிருப்தி தலைவர்களுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியிருப்பதால அவர்கள் தனித்து விடப்படும் சூழ்நிலையும் எழுந்துள்ளது. தற்போது கட்சியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு குறித்து ம.தி.மு.க., மாவட்டச் செயலர்களிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம்:

ஜீவன்(வடசென்னை):ம.தி.மு.க.,வில் வைகோவைத் தவிர வேறு எவனும் முக்கியம் கிடையாது. கட்சியை உடைக்க யார் நினைத்தாலும் அவர்கள் தலையில் மண் விழும். எங்கள் மாவட்டத்தில் கட்சிக்கு சிறு சேதாரம் கூட வராது. வைகோவை நம்பி வந்தவர்கள் தற்போது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டு விட்டனர். மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு இப்போது செயல்படுகின்றனர். மாவட்டச் செயலர்கள் கூட்டத்தின் போது எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய இரண்டு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துவேன். கடந்த 93ம் ஆண்டு தண்டபாணி சிதைக்கு தீ மூட்டிவிட்டு வைகோ பேசும்போது, "என்னுடன் வந்தால் பதவிகள் கிடைக்காது. துன்பமும் துயரமும் சிறைச்சாலையும் பரிசாக கிடைக்கும்' என்று பேசினார். பதவி வாங்க நினைத்தவர்கள் அன்றைக்கே விலகியிருக்க வேண்டியது தானே? சமுதாய மறுமலர்ச்சியே எங்கள் நோக்கம். ஆட்சிக்கு வருவது எங்கள் நோக்கமல்ல.

மணிமாறன்(தென்சென்னை):ம.தி.மு.க., தான் வைகோ; வைகோ தான் ம.தி.மு.க., எங்கள் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை வைகோவுடன் தான் இருப்போம். எங்கள் உயிர் பிரியும்போது தான் வைகோவிடம் இருந்து எங்களை பிரிக்க முடியும். மக்களின் ஜீவாதார பிரச்னைக்காக வைகோ நடைபயண்ம் மேற்கொண்டுள்ளார். அவர் எங்களின் குடும்பத் தலைவராக இருக்கிறார். இப்போது எதிர்ப்பு குரல் எழுப்புபவர்கள் எம்.பி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு குரல் எழுப்பட்டும்.

மாசிலாமணி (விழுப்புரம்):வைகோவின் தலைமையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களை இழுக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது. அவர்களைப் பற்றி வரும் 25ம் தேதி நடைபெறும் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் முடிவு செய்வோம்.

மோகன்குமார் (கோவை மாநகர்): கட்சிக்கு எதிராக இரண்டு பேர் பேசுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை. ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் வைகோவின் பின்னால் தான் இருக்கின்றனர். இப்போது இந்தப் பிரச்னை வந்திருப்பதால் நடைபயண்த்தில் கலந்து கொள்வதற்கு அதிகமான தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாங்கள் தேனிக்கு இப்போது கிளம்பிக் கொண்டிருக்கிறோம். வைகோ மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டார் என்கின்றனர். போன வாரம் வரை அவருக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததா? தேர்தல் தோல்வியால் ஒரு கட்சி அழிந்துவிடும் என்றால் தி.மு.க., எப்போதே அழிந்திருக்கும். அ.தி.மு.க., 96ம் ஆண்டு தோல்வியின்போதே அழிந்திருக்கும். இப்போது மட்டும் தி.மு.க.,வுக்கு தனி மெஜாரிட்டி பெற்றிருக்கிறதா? எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரனுக்கு அவர்கள் சொந்த மாவட்டத்திலேயே எந்த ஆதரவும் இல்லை. அவர்களுடன் ஈ, காக்கா கூட போகப் போவதில்லை. ம.தி.மு.க.,வை உடைக்க முயற்சிக்கின்னர். இது தி.மு.க.,வுக்கு நல்லதல்ல.

ரத்தினராஜ் (கன்னியாகுமரி):வைகோவுடன் தான் இருக்கிறோம். கட்சியில் எந்தப் பிரச்னையும் இல்லை. கட்சியை விட்டுப் போகிறவர்கள் போகும்போது ஏதாவது சொல்வது இயற்கை தான். அதைத் தான் எல்.கணேசனும் செஞ்சி ராமச்சந்திரனும் செய்கின்றனர்.

நிஜாம்(நெல்லை மாநகர்):கட்சியில் எந்த சலசலப்பும் இல்லை. இதுபோன்ற வயதானவர்கள் கட்சியை விட்டு போவது நல்லது தான். கட்சியில் இருந்தால் சாகும்வரை பதவி கேட்பார்கள். இவர்கள் போனால் தான் எங்களைப் போன்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வைகோவும் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியும்.

தாமரைக்கண்ண்ன்(சேலம்):எங்கள் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் இல்லை. எங்கள் கட்சிக்கு தலைவர் வைகோ தான். அவர் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். எல்.கணேசனுக்கு எம்.பி., பதவி கிடைத்தபோதும் செஞ்சி ராமச்சந்திரன் மந்திரியாக இருந்தபோதும் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டார்கள். கட்சிக்கு சோதனையான காலகட்டத்தில் கட்சிக்கு கெட்ட பெயர் உருவாக்கப் பார்க்கிறார்கள். நாங்கள் பலனை எதிர்பார்த்து இந்த கட்சியில் இல்லை. பலனை எதிர்பார்த்து இருந்தவர்கள் இதுவரை அனுபவித்தார்கள். இப்போது போகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. அவர்களுக்காக வேதனைப்படுகிறோம்.

ம.தி.மு.க., மாவட்டச் செயலர்களின் கருத்துக்கள் ஒருமித்த குரலில் ஒலிப்பதால் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ள எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் தனித்து விடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 25ம் தேதி சென்னையில் மாவட்டச் செயலர்கள், உயர்நிலைக் குழு, ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் ஆகியவற்றை பொதுச் செயலர் வைகோ கூட்டியுள்ளார். சென்னையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிருப்தி குரல் எழுப்பிய எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கட்சியை விட்டு நீக்கும்படி மாவட்டச் செயலர்கள் வற்புறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே வரும் 23ம் தேதி எல்.கணேசன் போட்டி கூட்டம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்துள்ளார். அதில் யார் யார் பங்கேற்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து அதிருப்தியாளர்களுக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கும் என்பதும் தெரியவரும்.

துரைபாலகிருஷ்ண்ன்(தஞ்சை): தி.மு.க.,வில் இருந்த போது புறக்கணிக்கப்பட்டு, அடையாளம் தெரியாமல் ஒடுங்கிக் கிடந்த செஞ்சி ராமசந்திரனும், எல்.கணேசனும் மீண்டும் தி.மு.க.,வில் சேர்ந்து அரசியல் அனாதைகள் ஆகப் போகின்றனர்.


பூமிநாதன்(மதுரை நகர்): வைகோ விசுவாசிகளும், மாவட்ட செயலர்களும் நடைபயண்த்தில் கலந்து கொண்டுள்ளோம். செஞ்சி ராமசந்திரனுடனும், எல்.கணேசனுடனும் ஒரு தொண்டர் கூட செல்ல மாட்டார்.


சண்முகசுந்தரம்(விருதுநகர்): அவர்கள் இருவரும் கருணாநிதியிடம் இரண்டு மாதத்திற்கு முன்பே விலை போய்விட்டனர். அவர்கள் போகிற போது போகட்டும் என்று இவ்வளவு நாளும் காத்திருந்தோம். பொன்.முத்துராமலிங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமை தான் அவர்களுக்கு ஏற்படும்.

மஞ்சனூர் ராமசாமி(கரூர் ): அவர்கள் இருவரும் பதவி சுகத்திற்காக அலைந்து பார்த்தனர். ம.தி.மு.க., வில் அதற்கு வழி இல்லை என தெரிந்ததும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.



செவந்தியப்பன்(சிவகங்கை):
13 ஆண்டுகளாக கட்சியினரின் உழைப்பை சுரண்டிய அவர்கள், இனி எங்கு சென்றாலும் ம.தி.மு.க.,வில் கிடைத்தது போல் முதல் மரியாதை கிடைக்காது. அவர்கள் தான் வைகோவை தூண்டிவிட்டு தனிக்கட்சி தொடங்க வைத்தனர். அப்போதும், இப்போதும் சுயநலத்திற்காக செயல்பட்டுள்ளனர்.

என்.ராமகிருஷ்ண்ன்(தேனி): அவர்கள் வெளியேறுவது எங்களுக்கு முன்பே தெரியும். இனிமேல் தான் ம.தி.மு.க., விற்கு நல்ல காலம். எங்கள் கட்சி இனி மேல் நன்கு வளர்ச்சி அடையும். வைகோவின் உழைப்பிற்கு பலன் கிடைக்கும் காலம் நெருங்கி வந்து விட்டது.

வீரைளவரசு(மதுரை புறநகர்): ம.தி.மு.க., வில் தனி நபர்கள் இருவர் விலகுவதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் வராது. வைகோவிற்கு மக்களின் ஆதரவு முன்பை விட அதிகரித்துள்ளதை நடைபயண்த்தின் போது நேரடியாகவே பார்க்க முடிகிறது.

மகாலிங்கம்(நாகை): கட்சியில் பெரியவர்கள் பலர் இருக்கும் போது, நான் தடாலடியாக எந்தக் கருத்தும் சொல்லிவிட முடியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இருவர் விலகிச் செல்வதால், கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறு மாவட்ட செயலர்கள் கருத்து தெரிவித்தனர்.

சிவகாசி எம்.பி., ரவிச்சந்திரன் கூறுகையில், வைகோவின் முழு கட்டுப்பாட்டில் தான் ம.தி.மு.க., உள்ளது. பொதுச் செயலர் மீது தொண்டர்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். இருவர் கட்சியை விட்டு செல்வதால், கட்சிக்கு பாதிப்பு வராது என்றார்.

நடராஜன் (திருச்சி மாநகர்): இவர்கள் இரண்டு பேருக்கு உதவுவதற்காக வைகோ அதிகம் கஷ்டப்பட்டார். எது எப்படி இருந்தாலும் 2007ம் ஆண்டு ம.தி.மு.க.,விற்கு எழுச்சி ஆண்டாக அமையப்போகிறது. சுயநல தலைவர்கள் வெளியேறியதால் எந்தக்கட்சியும் அழிந்ததாக வரலாறு இல்லை.

நன்றி தினமலர்

Monday, December 18, 2006

முல்லை பெரியாறு உரிமை காப்பு நடைபயணம்.

முல்லை பெர்யாறு அணை பிரச்சணைக்கு உடனடி தீர்வு காணவும், அணையின் மீது, தமிழகத்திற்கு உள்ள உரிமையை நிலை நாட்டவும், ம.தி.மு.க. பொது செயளாலர் வைகோ தலைமையில் ம.தி.மு.க. நடைபயணத்தை இன்று துவக்கியுள்ளது.



இன்று, மதுரையில் துவங்கிய நடைபயணம், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி வழியாக கடலூரில் 23ம் தேதி நடைபயணத்தை நிறைவு செய்வார் வைகோ.

முல்லை பெரியாறு உரிமை காப்பு நடைபயணம் வெற்றி பெற, புரட்சி புயல் வைகோ அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

முல்லை பெரியாறு அணை பற்றி வைகோ.
முல்லை பெரியாறு அணைக்காக போராடும் வைகோ


Friday, December 08, 2006

தமிழக காங்கிரஸ், பா.ம.க.வை பின் தொடரும் தே.மு.தி.க.

அரசியல் கட்சிகளுக்கு இடையே அடிதடி, சட்டை கிலிப்பு துவங்கி, கொலை வரை செல்வது சகஜம் தான். ஆனால் ஒரு கட்சிக்குள்ளேயே அட்தடி நடப்பது வெகு குறைவே.

உள்கட்சி தகராறில் பிரபலமானது தமிழக காங்கிரஸ் தான். அதற்கு அடுத்தபடியாக இருப்பது பா.ம.க. இந்த வரிசையில் தே.மு.தி.க.வும் சேர்ந்துவிட்டது என்பதுக்கு உதாரணம் தான் சமீப காலங்களில் அடிக்கடி நடக்கும் உள்கட்சி சண்டைகளும், அடிதடிகளும். நேற்று இதேபோல் மற்றொரு அடிதடி...



நேற்று கடலூர் மாவட்டத்தில் நடந்த தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் நடந்த கைகளப்பில் நகர மகளிர் அணியை சேர்ந்த பெண் உட்பட பலர் தாக்கப்பட்டனர்.

இதுகுறித்து மாவட்ட பிரதிநிதி பார்த்திபன் கூறியதாவது:

ஆரம்பக் காலங்களில் மன்றங்களில் இருந்து வந்த எங்களுக்கு கட்சியில் மறியாதை இல்லை. ஆனால், மற்ற கட்சியில் இருந்து வந்தவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். மாற்று கட்சியில் இருந்து வந்து இங்கு பதவியை பெற்றவர்கள் எங்களை செல்லா காசாக நினைக்கின்றனர். பணம் கொடுத்து நிர்வாகி பதவியை பெற்றவர்கள் தான் தற்போது மாவட்ட பொறுப்பில் இருக்கின்றனர். தற்போது இவர்கள் பணம் பெற்று கொண்டு நகர நிர்வாகி பதவியை வழங்குகின்றனர். இவர்களால் தற்போது தே.மு.தி.க. ஜாதி அடிப்படையில் செயல்பட ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தில் ஊழல் இருக்க கூடாது என தலைவர் விஜயகாந்த் முழக்கமிடுகிறார். முதலில் கட்சிகுள்ளேயே இருக்கும் இந்த ஊழல் பெருச்சாலிகளை ஒழிக்க வேண்டும். மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டம் கூட்டியிருக்கின்றனர். ஆனால், நிர்வாகிகள் பலருக்கு இந்த கூட்டம் குறித்து தெரிவிக்காததால், கூட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது.இதனை நாங்கள் தட்டி கேட்டது தவறு என்று கூறுகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

---
பல நதிகள் கலந்தாலும், கடலின் உப்பு தன்மை குறைய போவதில்லை என வெறும் வாய் சவடால் விட்டால் போத்தாது, கட்சிகுள்ளேயே, பணம் பெற்று தான் பதவி தருபவர்கள் எப்படி மக்களுக்கு உண்மையாக இருப்பார்கள் என மக்கள் சிந்திக்க வேண்டும். கடலில் குடிநீர் கலந்தால், கடல் நீரின் உவர்ப்பு தன்மை மாறாது, ஆனால், கூவம் போன்ற மாசுபட்ட நதிகள் கடலில் கலந்தால் கடல் நீரும் மாசுபடும் என்று தான் கூவம் கடலில் கலக்காமல் தடுப்பு அமைத்துள்ளனர் என்பதை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும், மக்களும் உணர வேண்டும்.

மற்ற பெரிய கட்சிகளான தி.மு.க, அ,தி.மு.க போன்ற கட்சிகளில் இப்படி அடிதடி நடப்பது மிகவும் குறைவு தான். ம.தி.மு.க.வில் இது போல் நடந்ததே இல்லை என்பதையும் இங்கு நான் நினைவுகூற விரும்புகிறேன்.

Wednesday, December 06, 2006

உன் குற்றமா? என் குற்றமா? யாரை நானும் குற்றம் சொல்ல....

இன்று ஜெயா டி.வி. செய்திகளை கண்டதும், அதில் வந்த செய்தியை கண்டதும் எனக்க பேர் அதிர்ச்சி. நம், தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகளின் நிலை இந்த அளவுக்கு தரம் தாள்ந்துவிட்டதை நினைத்து.

அந்த செய்தி இது தான்.



தமிழகத்தில் உள்ள பொது கழிபிடங்களை எல்லாம் தி.மு.க.வினரே ஆக்ரமிப்பு செய்த்துவிட்டனராம். இதனால் அப்பாவி பொது மக்கள் (அன்றைய ஆட்சியில் இதே கழிபிடங்களை ஆக்ரமித்தவர்கள்) பலரது வாழ்க்கையே கேள்விகுறி ஆக்கப்பட்டதனால் அவர்கள் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர்.

இது யார் செய்த குற்றம்,

கழிபிடத்தை கூட விட்டுவைக்காமல் பணம் சுரண்ட முற்படும், தி.மு.க.வினரின் குற்றமா?


அல்லது,


இதை கூட விட்டுவைக்காமல் அரசியல் இலாபம் தேட நினைக்கும் அ.தி.மு.க.வின் குற்றமா?


அல்லது,


இவர்கள் இருவரிடமே மாறி மாறி ஆட்சியை ஒப்படைக்கும், நம் மக்கலின் குற்றமா?


அல்லது,


இதையும் ஒரு செய்தி என இனையத்தில் பதிவு செய்த எனது குற்றமா?

Monday, December 04, 2006

ஈழ தமிழருக்காக என் உயிரையும் கொடுப்பேன் - வைகோ

ஈழ தமிழருக்காகவும், விடுதலை புலிகலுக்காகவும் தன் உயிரையும் தருவேன் என சி.என்.என் - ஐ.பி.என் அலைவரிசையில், கரண் தபார் நடத்தும், 'Devil's advocate' நிகழ்ச்சியில் வைகோ தெரிவித்தார்.

மேலும் படிக்க இங்கே காணவும்.
http://www.ibnlive.com/videos/27612/devils-advocate-vaiko.html

ஈழ தமிழரின் கண்ணீர் கதை

தமிழ் நதி அவர்கள் தங்கள் கண்ணீர் கதையை, இங்கு விவரிக்கிறார்.

http://tamilnathy.blogspot.com/2006/11/blog-post_28.html
இதை படித்ததும், என் கண்களில் நீர் வரத் துவங்கியது. இதை தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்!

முல்லை பெரியாறு அணை பற்றி வைகோ.

முல்லை பெரியாறு அணை பிரச்சணை பற்றி ம.தி.மு.க. பொது செயலாளர், புரட்சி புயல் வைகோ அவர்கள் கலந்து கொண்ட 'நேர்முகம்' நிகழ்ச்சியின் ஒளிபதிவு.