இன்ஜினியரை காப்பாற்றுங்கள் : பிரதமரிடம் வைகோ முறையீடு
சென்னை: "அசாம் மாநிலத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ இன்ஜினியரை பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும்," என்று பிரதமரிடம் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோருக்கு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சிவகாசி தாலுகா விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், மத்திய அரசின் சாலை அமைப்பு நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரை அசாமில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். பயங்கரவாதிகளிடம் இருந்து கணேசனை பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.
இதே விவகாரம் குறித்து நேற்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடமும் தொலைபேசி மூலம் வைகோ வலியுறுத்தினார்.
செய்தி: தினமலர்
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோருக்கு ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் சிவகாசி தாலுகா விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், மத்திய அரசின் சாலை அமைப்பு நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரை அசாமில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். பயங்கரவாதிகளிடம் இருந்து கணேசனை பாதுகாப்பாக மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.
இதே விவகாரம் குறித்து நேற்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடமும் தொலைபேசி மூலம் வைகோ வலியுறுத்தினார்.
செய்தி: தினமலர்
0 Comments:
Post a Comment
<< Home