Tuesday, January 30, 2007

வருமான வரி கணக்கில் முரண்பாடு - ஒத்து கொண்டார் விஜயகாந்த்

தனது வருமான வரி கனக்கில் முரண்பாடு உள்ளதை, உணர்சி வச பட்டு ஒத்துக் கொண்டார், தே.மு.தி.க. தலைவரும், சினிமா (நகைசுவை) நடிகருமான விஜயகாந்த்.

நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் மிக ஆவேசமாக பேசிய வசனத்தில் சில துளிகள்
:

* "எனது வருமான வரிக்கணக்கில் மாறுபாடு இருக்கிறது என்கின்றனர். இந்தியா முழுவதும் உள்ள எம்.எல்.ஏ.க்களின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்த அதிகாரிகள் தயாரா?"
-- நாட்டுல எத்தன எம்.எல்.ஏ.க்கள் ஊழல் பண்றாங்க. நானும் எம்.எல்.ஏ. வா இருக்கும் போதே சுருட்ட விடமாட்டேங்கிறாங்களே??? என்ன மட்டும் புடிச்சிடீங்களே? மத்தவங்களையும் புடிங்க!!!

* "ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு பின், உலக சரித்திரத்தில் முதன் முறையாக தே.மு.தி.க. அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தியுள்ளனர்"
-- எவ்வளவு கஷ்ட பட்டு, உலகத்துல இருக்குற எல்லா நாட்டு வருமான துறை அதிகாரிங்க எங்க எங்க எல்லாம் சோதனை நடத்தி இருக்காங்கனு, புள்ளி விவரம் எல்லாம் எடுத்து, ரொம்ப பத்திரமா இருக்கடும்னு கட்சி அலுவலகத்துலயே மறச்சி வெச்சா, இங்கயும் வந்து சோதனை நடத்திட்டாங்களே?? கட்சி அலுவலகத்துல தான் நான், ஊழல் பன்ன விவரம் எல்லாம் நான் வெச்சிருப்பேன்'னு கலைஞர தவிர வேர யாராலும் யோசிக்க முடியாது. அதனால...???

* "பழிவாங்கும் அரசியல் செய்து எனக்கு பழக்கம் இல்லை. ஆனால், திமுகவின் நடவடிக்கை, நாளைக்கு நான் ஆட்சியில் உட்கார்ந்தாள் பழிவாங்கும் எண்ணத்தை தூண்டும் விதமாக உள்ளது."

-- இதனால், நான் சொல்லி கொள்வது என்னவென்றால், இவர்களை பழிவாங்குவேன், பழிவாங்குவதை தவிர வேரெதுவும் செய்ய மாட்டேன்... இதுவரைக்கும் எனக்கு பழிவாங்கும் பழக்கம் எப்படி இல்லாம போச்சி? அடடா, 'மூனு வயசு பையன், அப்பாவ பாத்து, என் அனுபவத்துல இப்படி ஒரு படத்த பார்த்ததே இல்லனு'பாராட்டுர மாதிரி பேசிட்டனோ! நான் அரசியல மொலச்சே மூனு எல விடல...

* "பழி வாங்கும் அரசியலால், உங்கள் சந்ததிகள் தான் பாதிக்க படுவர்"
-- இன்னிகு நீ(கலைஞர்) பண்ணுரதுக்கு எல்லம், நாளைக்கு உன் புள்ளையயும், பேரனையும் தான் நான் பழிவாங்குவேன், அதனால, (னாம இப்பவே ஒரு டீல் போட்டுக்கலாம்)

* "தற்போது செயல் படுத்த படும் நலப்பணித்திட்டங்கள் அடிதட்டு மக்களுக்கு போய் சென்றடையவில்லை"
-- அதானல தான் நானே அடிசிட்டேன்


ஒரு எம்.எல்.ஏ. பதவியை பிடித்த உடனேயே, அடுத்து ஆட்சிக்கு வந்தால் உங்களையும், உங்கள் சந்ததிகளையும், பழிவாங்குவேன். நான் மட்டுமா, வரி ஏப்பு செய்தேன், எல்லா அரசியல்வாதிகளும் தான் செய்கிறார்கள், என கூறுபவர் எப்படி சுத்தமான, நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை தருவார்?

திரையுலக மாயையை விட்டு தமிழர்கள் வெளிவர வேண்டும்.

திரையுலகை எதிர்த்த பெரியாரின் பெயரையும் திராவிட என்ற சொல்லையும், பயன் படுத்து ஆட்சி செய்யும் கட்சிகள் அனைத்தும் (ம.தி.மு.க) தவிர திரையுலகத்தினரையே தலைவராகவும், திரையுலகத்தினரையே கடவுளாகவும் பார்க்கும் இன்றைய நிலையை, பெரியாரின் ஆவி கூட இன்றிருந்தால் துக்கம் அடைந்திருக்கும்.

1 Comments:

Blogger Raji said...

Yepdi JP..Ipdi laam thedi pidichu post podura...
Neraya vishyam theriyudhu un blog pakkam vandha..Good..

5:29 PM  

Post a Comment

<< Home