கூடியது வைகோவின் மதிமுக பொதுக்குழு
சென்னை: பரபரப்பான சூழலில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.
வைகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அவைத் தலைவர் எல்.கணேசன், துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் சேலத்தில் போட்டி மதிமுக பொதுக் குழுவைக் கூட்டி வைகோவை கட்சியை விட்டு நீக்கினர்.
இந் நிலையில் வைகோ தலைமையிலான மதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. அண்ணா நகரில் உள்ள விஜஸ்ரிமஹால் கல்யாண மண்டபத்தில் நடக்கும் இக் கூட்டத்துக்கு வைகோ தலைமை தாங்குகிறார்.
மதிமுக பொதுக் குழுவில் 1,530 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் கட்சி விரோத நடவடிக்கையால் நீக்கப்பட்டவர்கள் போக மொத்தம் 1,406 பேர் உள்ளனர். அவர்களில் 1,300க்கும் மேற்பட்டோர் தங்கள் பக்கம் உள்ளதாக வைகோ தரப்பு கூறுகிறது.
இன்றைய கூட்டத்தில் எல்.கணேசன், செஞ்சி மீது மேலும் கடுமையான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. புதிய அவைத் தலைவராக பொருளாளர் கண்ணப்பன் தேர்ந்தெடுக்கப்படலாம். வைகோவின் வலதுகரமான மதிமுகவின் கொள்கை விளக்க அணியின் செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு முக்கியப் பொறுப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.
பொதுக் குழுக் கூட்டத்தை சீர்குலைக்க எல்.கணேசன் தரப்பும், திமுகவும் முயல்வதாக வைகோ குற்றம் சாட்டியுள்ள நிலையில் பெரும் பரபரப்பு பிளஸ் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய மதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது.
இக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று மாலை முதலே மதிமுக பொதுக் குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளும் கட்சியின் தலைமையகத்திலும் கல்யாண மண்டபத்திலும் கூடிவிட்டனர்.
நேற்று இரவு முழுவதும் மதிமுக தொண்டரணியினர் கல்யாண மண்டபத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை முன்னதாகவே கல்யாண மண்டபத்துக்கு வந்துவிட்ட வைகோ ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
பொதுக் குழு உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் மண்டபத்துக்குள் விட வேண்டாம் என தொண்டரணியினருக்கு உத்தரவிட்டார். மண்டபத்தில் வெளியே ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
நன்றி: thatstamil
வைகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அவைத் தலைவர் எல்.கணேசன், துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் சேலத்தில் போட்டி மதிமுக பொதுக் குழுவைக் கூட்டி வைகோவை கட்சியை விட்டு நீக்கினர்.
இந் நிலையில் வைகோ தலைமையிலான மதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. அண்ணா நகரில் உள்ள விஜஸ்ரிமஹால் கல்யாண மண்டபத்தில் நடக்கும் இக் கூட்டத்துக்கு வைகோ தலைமை தாங்குகிறார்.
மதிமுக பொதுக் குழுவில் 1,530 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் கட்சி விரோத நடவடிக்கையால் நீக்கப்பட்டவர்கள் போக மொத்தம் 1,406 பேர் உள்ளனர். அவர்களில் 1,300க்கும் மேற்பட்டோர் தங்கள் பக்கம் உள்ளதாக வைகோ தரப்பு கூறுகிறது.
இன்றைய கூட்டத்தில் எல்.கணேசன், செஞ்சி மீது மேலும் கடுமையான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. புதிய அவைத் தலைவராக பொருளாளர் கண்ணப்பன் தேர்ந்தெடுக்கப்படலாம். வைகோவின் வலதுகரமான மதிமுகவின் கொள்கை விளக்க அணியின் செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு முக்கியப் பொறுப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.
பொதுக் குழுக் கூட்டத்தை சீர்குலைக்க எல்.கணேசன் தரப்பும், திமுகவும் முயல்வதாக வைகோ குற்றம் சாட்டியுள்ள நிலையில் பெரும் பரபரப்பு பிளஸ் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய மதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது.
இக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று மாலை முதலே மதிமுக பொதுக் குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளும் கட்சியின் தலைமையகத்திலும் கல்யாண மண்டபத்திலும் கூடிவிட்டனர்.
நேற்று இரவு முழுவதும் மதிமுக தொண்டரணியினர் கல்யாண மண்டபத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை முன்னதாகவே கல்யாண மண்டபத்துக்கு வந்துவிட்ட வைகோ ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
பொதுக் குழு உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் மண்டபத்துக்குள் விட வேண்டாம் என தொண்டரணியினருக்கு உத்தரவிட்டார். மண்டபத்தில் வெளியே ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
நன்றி: thatstamil
0 Comments:
Post a Comment
<< Home