புதிய தென்றல்

Tuesday, January 30, 2007

வருமான வரி கணக்கில் முரண்பாடு - ஒத்து கொண்டார் விஜயகாந்த்

தனது வருமான வரி கனக்கில் முரண்பாடு உள்ளதை, உணர்சி வச பட்டு ஒத்துக் கொண்டார், தே.மு.தி.க. தலைவரும், சினிமா (நகைசுவை) நடிகருமான விஜயகாந்த்.

நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் மிக ஆவேசமாக பேசிய வசனத்தில் சில துளிகள்
:

* "எனது வருமான வரிக்கணக்கில் மாறுபாடு இருக்கிறது என்கின்றனர். இந்தியா முழுவதும் உள்ள எம்.எல்.ஏ.க்களின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்த அதிகாரிகள் தயாரா?"
-- நாட்டுல எத்தன எம்.எல்.ஏ.க்கள் ஊழல் பண்றாங்க. நானும் எம்.எல்.ஏ. வா இருக்கும் போதே சுருட்ட விடமாட்டேங்கிறாங்களே??? என்ன மட்டும் புடிச்சிடீங்களே? மத்தவங்களையும் புடிங்க!!!

* "ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு பின், உலக சரித்திரத்தில் முதன் முறையாக தே.மு.தி.க. அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தியுள்ளனர்"
-- எவ்வளவு கஷ்ட பட்டு, உலகத்துல இருக்குற எல்லா நாட்டு வருமான துறை அதிகாரிங்க எங்க எங்க எல்லாம் சோதனை நடத்தி இருக்காங்கனு, புள்ளி விவரம் எல்லாம் எடுத்து, ரொம்ப பத்திரமா இருக்கடும்னு கட்சி அலுவலகத்துலயே மறச்சி வெச்சா, இங்கயும் வந்து சோதனை நடத்திட்டாங்களே?? கட்சி அலுவலகத்துல தான் நான், ஊழல் பன்ன விவரம் எல்லாம் நான் வெச்சிருப்பேன்'னு கலைஞர தவிர வேர யாராலும் யோசிக்க முடியாது. அதனால...???

* "பழிவாங்கும் அரசியல் செய்து எனக்கு பழக்கம் இல்லை. ஆனால், திமுகவின் நடவடிக்கை, நாளைக்கு நான் ஆட்சியில் உட்கார்ந்தாள் பழிவாங்கும் எண்ணத்தை தூண்டும் விதமாக உள்ளது."

-- இதனால், நான் சொல்லி கொள்வது என்னவென்றால், இவர்களை பழிவாங்குவேன், பழிவாங்குவதை தவிர வேரெதுவும் செய்ய மாட்டேன்... இதுவரைக்கும் எனக்கு பழிவாங்கும் பழக்கம் எப்படி இல்லாம போச்சி? அடடா, 'மூனு வயசு பையன், அப்பாவ பாத்து, என் அனுபவத்துல இப்படி ஒரு படத்த பார்த்ததே இல்லனு'பாராட்டுர மாதிரி பேசிட்டனோ! நான் அரசியல மொலச்சே மூனு எல விடல...

* "பழி வாங்கும் அரசியலால், உங்கள் சந்ததிகள் தான் பாதிக்க படுவர்"
-- இன்னிகு நீ(கலைஞர்) பண்ணுரதுக்கு எல்லம், நாளைக்கு உன் புள்ளையயும், பேரனையும் தான் நான் பழிவாங்குவேன், அதனால, (னாம இப்பவே ஒரு டீல் போட்டுக்கலாம்)

* "தற்போது செயல் படுத்த படும் நலப்பணித்திட்டங்கள் அடிதட்டு மக்களுக்கு போய் சென்றடையவில்லை"
-- அதானல தான் நானே அடிசிட்டேன்


ஒரு எம்.எல்.ஏ. பதவியை பிடித்த உடனேயே, அடுத்து ஆட்சிக்கு வந்தால் உங்களையும், உங்கள் சந்ததிகளையும், பழிவாங்குவேன். நான் மட்டுமா, வரி ஏப்பு செய்தேன், எல்லா அரசியல்வாதிகளும் தான் செய்கிறார்கள், என கூறுபவர் எப்படி சுத்தமான, நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை தருவார்?

திரையுலக மாயையை விட்டு தமிழர்கள் வெளிவர வேண்டும்.

திரையுலகை எதிர்த்த பெரியாரின் பெயரையும் திராவிட என்ற சொல்லையும், பயன் படுத்து ஆட்சி செய்யும் கட்சிகள் அனைத்தும் (ம.தி.மு.க) தவிர திரையுலகத்தினரையே தலைவராகவும், திரையுலகத்தினரையே கடவுளாகவும் பார்க்கும் இன்றைய நிலையை, பெரியாரின் ஆவி கூட இன்றிருந்தால் துக்கம் அடைந்திருக்கும்.

Monday, January 15, 2007

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

ஜாதி, மத வேற்றுமை உணர்வுகள் மறைந்து, சகோதரத்துவமும், மனிதநேயமும் வளர்த்து, தமிழக மக்கள் நல்வாழ்வு பெறவும், இலங்கை தமிழர்கள் இன்னல் நீங்கி அவர்களுக்கு உரிமை வாழ்வும், விடியலும் மலரவும் தைப்பொங்கல் அமைந்திட வாழ்த்துக்கள்.

-- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ:

Wednesday, January 10, 2007

கூடியது வைகோவின் மதிமுக பொதுக்குழு

சென்னை: பரபரப்பான சூழலில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

வைகோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அவைத் தலைவர் எல்.கணேசன், துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் சேலத்தில் போட்டி மதிமுக பொதுக் குழுவைக் கூட்டி வைகோவை கட்சியை விட்டு நீக்கினர்.

இந் நிலையில் வைகோ தலைமையிலான மதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. அண்ணா நகரில் உள்ள விஜஸ்ரிமஹால் கல்யாண மண்டபத்தில் நடக்கும் இக் கூட்டத்துக்கு வைகோ தலைமை தாங்குகிறார்.

மதிமுக பொதுக் குழுவில் 1,530 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் கட்சி விரோத நடவடிக்கையால் நீக்கப்பட்டவர்கள் போக மொத்தம் 1,406 பேர் உள்ளனர். அவர்களில் 1,300க்கும் மேற்பட்டோர் தங்கள் பக்கம் உள்ளதாக வைகோ தரப்பு கூறுகிறது.

இன்றைய கூட்டத்தில் எல்.கணேசன், செஞ்சி மீது மேலும் கடுமையான நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. புதிய அவைத் தலைவராக பொருளாளர் கண்ணப்பன் தேர்ந்தெடுக்கப்படலாம். வைகோவின் வலதுகரமான மதிமுகவின் கொள்கை விளக்க அணியின் செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு முக்கியப் பொறுப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது.

பொதுக் குழுக் கூட்டத்தை சீர்குலைக்க எல்.கணேசன் தரப்பும், திமுகவும் முயல்வதாக வைகோ குற்றம் சாட்டியுள்ள நிலையில் பெரும் பரபரப்பு பிளஸ் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய மதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது.

இக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று மாலை முதலே மதிமுக பொதுக் குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளும் கட்சியின் தலைமையகத்திலும் கல்யாண மண்டபத்திலும் கூடிவிட்டனர்.

நேற்று இரவு முழுவதும் மதிமுக தொண்டரணியினர் கல்யாண மண்டபத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை முன்னதாகவே கல்யாண மண்டபத்துக்கு வந்துவிட்ட வைகோ ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

பொதுக் குழு உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் மண்டபத்துக்குள் விட வேண்டாம் என தொண்டரணியினருக்கு உத்தரவிட்டார். மண்டபத்தில் வெளியே ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.


நன்றி: thatstamil

Saturday, January 06, 2007

ஈழ தமிழர் பாதுகாப்பு பேரணி - ஒளிபதிவு

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 1ம் தேதி, ம.தி.மு.க. சார்பில், வைகோ தலைமையில் ஈழ தமிழர் பாதுகாப்பு பேரணி நடந்தது. இந்த பேரணி பற்றிய செய்தியை இங்கே காணவும்.

http://pudhiyathenral.blogspot.com/2006/09/blog-post_10.html

இந்த பேரணியில் கலந்து கொண்டு வைகோ, மற்றும் பழ.நெடுமாறன் அவர்களின் பேச்சு ஒளிபதிவு.













Tuesday, January 02, 2007

திமுகவில் கோஷ்டி பூசல், வன்முறை

திமுகவில் கோஷ்டி பூசல் காரணமாக, பெறும் வன்முறை அரங்கேறியது. இதனால் பொது மக்கள் பெறும் அவதிக்குள்ளானார்கள். தமிழக காவல்துறையோ ஆளும் கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் கைகள் கட்டபட்ட நிலைக்கு ஆளானார்கள்.

காங்கிரஸ், பா.ம.க, தே.மு.தி.க. கட்சிகளில் நடக்கும் கோஷ்டி பூசல்களில் வெறும் வேஷ்டி மட்டும் தான் கிழியும், தி.மு.க.வில் கார் எரிப்பது வரை நடந்தது, அதை தடுக்க முடியாமல் காவலரின் கைகள் கட்ட பட்டது, இதை கண்டித்தோ, மன்னிப்பு வேண்டியோ அறிக்கை கூட விடாமல் இருப்பதை நாமாவது கண்டிப்போம்.


தே.மு.தி.க.வில் சில நாட்கள் முன் நடந்த கோஷ்டி பூசல் பற்றிய எனது பதிவையும் இங்கே காணவும்.


------
தி.மு.க வன்முறை பற்றி, thatstamil.com தளத்தில் வெளியான செய்தி:

திமுக பைட்-வேட்டி 'கிழியல்', கார் 'எரியல்'
ஜனவரி 02, 2007

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திமுகவினர் இடையே பயங்கர அடிதடி, மோதல் ஏற்பட்டது.

இதில் நகரச் செயலாளர் மண்டை உடைக்கப்பட்டு, அவரது கார் தீ வைத்து எரிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் அமைச்சர் செ.ம.வேலு, முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி ஆகியோர் தனித்தனி கோஷ்டிகளாக இயங்கி வருகின்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது முறைப்புகளும் லேசான கெட்ட வார்த்தை திட்டு சண்டைகளும் நடக்கும். ஆனால், இதுவரை அது அடிதடியானதில்லை.

இந் நிலையில் திருவண்ணாமலை நகரச் செயலாளர் தியாகராஜன் காந்தி சிலை அருகே உள்ள பிச்சாண்டி எமெலே அலுலகத்தில் நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அவருடன் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருந்தனர்.

அப்போது நகரச் செயலாளருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பிருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நகரச் செயலாளர் தியாகராஜன் உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்டதில் அவரது மண்டையில் அடிபட்டு, பலத்த காயமடைந்தார்.

மேலும் தியாகராஜின் காரும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அவரது ஆட்கள் திருப்பித் தாக்க ஆரம்பித்தனர். இதில் சேர்கள் பறந்தன, வேட்டிகள் உருவப்பட்டு சட்டைகள் கிழிக்கப்பட்டு அலங்கோலமாயின.

இந்த மோதல் அப்படியே ரோட்டுக்கும் பரவியது. இரு தரப்பினரும் அந்த வழியாக வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இதில் தனியார் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுக்கியது.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் பிரித்துவிட முயன்றனர். ஆனால் போலீசாரை தள்ளிவிட்டபடி ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து இரு தரப்பினரும் அடித்துக் கொண்டனர். இதையடுத்து அங்கு அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு மோதலை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் நகர செயலாளர் தியாகராஜனின் ஆதரவாளர்கள் காந்தி சிலை முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மேலும் அங்கு பதட்டம் உருவானது. காயமடைந்த தியாகராஜன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செய்தி: thatstamil

அரசியல் கலாச்சாரத்துக்கு புதுமெருகு கொடுத்தவர வைகோ!

அரசியல் கலாச்சாரத்துக்கு புதுமெருகு கொடுத்தவர வைகோ! நல்ல பண்புகளை மரபுகளை நிலை நாட்டுபவர்!
மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ்.

“பாராட்ட வேண்டியவர்களை நாட்டுமக்கள் உரியநேரத்தில் பாராட்ட வேண்டும். அதன் பொருட்டுத்தான் வைகோவைப் பாராட்ட நான் இங்கே வந்திருக்கிறேன்” என சென்னையில் 11.12.2006 அன்று நடைபெற்ற “பாரதி - 125” விழாவில் மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலாளர் பி.எஸ்.இராகவன் ஐ.ஏ.எஸ். பேசும்போது குறிப்பிட்டார்.

அதன் விவரம் வருமாறு:

எப்போது இந்தக் கூட்டம் நடக்கப்போகின்றது என்று ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் நான் இருந்தேன். அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று இந்தக் கூட்டத்தில் வைகோவுக்கு நான் என்னுடைய பெருமதிப்பைத் தெரிவிப்பது என்பதை ஒரு கடமையாகக் கருதுகிறேன். எனக்கு 79 வயது ஆகின்றது. யாரையும் பொய்யாகப் புகழவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் வாழ்ந்த காலத்தில் நேருவிடம் இருந்து ஆரம்பித்து பலதரப் பட்ட கட்சி அரசியல் வாதிகளுடன் பழகியிருக்கின்றேன். நான் சேவையில் சேர்ந்த காலம் 1951. இந்தியா குடியரசாகி ஒரு ஆண்டு தான் ஆகியிருந்தது. அப்படி நான் பார்த்துப் பழகியவர்களில் நேரு, பி.சி.ராய், பட்டேல், ராஜேந்திரபிரசாத் இப்படிப் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இப்போது ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு அரசியல் கலாச்சாரத்திற்கு புதுமெருகு கொடுத்து அதற்கு வேண்டிய நல்ல பண்புகளையும், மரபுகளையும் இன்று நிலைநாட்டிக் கொண்டு இருப்பவர் வைகோ என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை.

இப்பொழுது இங்கு சொன்னார்கள், பாராட்ட வேண்டியவர்களைப் பாராட்ட வேண்டும் என்று. எந்த நாட்டு மக்களுக்குப் பாராட்ட வேண்டியவர் களைப் பாராட்டத்தெரியவில்லையோ அந்த நாடு உருப்படாது. அந்த அடிப்படையில் தான், நான் வைகோவின் பொதுச்சேவை, அவருடைய தரம் இவற்றைப் பாராட்டுகிறேன். உயர்ந்த நடத்தை, முக்கியமாக பாரதியாருடைய தனிச் சிறப்புக் குணம் அவரிடம் இருக்கிறது அதைச் சொல்லவேண்டும். அது என்ன வென்றால் பொதுப் பிரச்சனையில் அல்லது பொதுவாழ்வுப் பிரச்சனை அல்லது அரசியல் பிரச்சனை என்று வரும்பொழுது தன்னுடைய கருத்தை அஞ்சாநெஞ்சத்துடன், சுதந்திரமாகச் சொல்வது. அந்த மரபும், பண்பும் இப்பொழுது நாட்டில் அற்றுப் போய்க்கொண்டு இருக்கிறது.

கருத்துச் சுதந்திரம் என்பது இப்பொழுது இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது. ஏனென்று கேட்டால். கருத்தைச் சொல்வதற்கு சுதந்திரம் இருந்தாலும், கருத்துச் சொன்னபின் சுதந்திரம் இருக்கிறதா? என்று ஒரு பயம் இருக்கிறது இன்றைக்கு. அபூர்வப்பிறவி, அஞ்சா நெஞ்சம் படைத்தவர் வைகோ என்பதனால் அவருக்கு எனது மதிப்பைத் தெரிவிக்கவேண்டும் என்று இங்கு வந்திருக்கிறேன். நான் அதை ஒரு பொது கடமையாகக் கருதுகிறேன், சாதாரணமாக நீங்கள் பார்க்கவேண்டும், என்போன்று நிர்வாகத்தில் இருந்தவர்கள், அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் துரத்தில் ஒதுங்கி நின்றுஎப்பொழுது பார்த்தாலும் அளவுக்கு மேலாக விமர்சனம் செய்துகொண்டு அப்படி இப்படி இந்த அரசியல்வாதிகள் என்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். அது வாழ்க்கையை வீணடிக்கும் வழக்கம். அறிவுஜீவிகள் என்பவர்கள், விவரம் தெரிந்தவர்கள் - அரசியல்வாதிகள் என்றைக்கு ஒரு நல்ல தரத்தை நிலை நாட்டுகிறார்களோ அவர்களைப் பாராட்டி அவர்களை முன்னுக்குக் கொண்டுவந்து, மக்களுக்கு முன்னோடிகளாகத் திகழ்கிறார்கள் என்று ஒரு பிரமாணப் பத்திரத்தை அவர்கள் அளிக்க வேண்டும். அவர்களது கடமை அது என்கின்ற ஒரு கருத்தில்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.


இரண்டாவது காரணம் கே.எஸ். இராதாகிருஷ்ணனின் புத்தக வெளியீட்டு விழா கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவரை நான் பார்த்த அளவில் சொல்கிறேன் பண்பாளர். தன்வாழ்க்கையில் இன்னும் பல சிகரங்களைத் தொட வேண்டிய தகுதி அவருக்கு இருக்கிறது. எழுத்திலும் அவருடைய புத்தகங்களை நான் படித்தேன். எழுத்திலும் வல்லமையுடன் எழுதுகிறார். கருத்திலும் தெளிவாக இருக்கிறார். அவருடைய உள்ளத்தில் உண்மை ஒளி இருக்கின்றது. ஆகையினால் எழுத்தில் அந்த ஒளிவருகின்றது. அவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

தமிழ்ப்பற்று நமக்கு வேண்டும், ஒரு கதை சொல்லுகின்றேன். மூன்று முறை united nation commision தலைவனாக இருந்தேன். ஐக்கிய நாடுகளில் ஐந்து அதிகாரபூர்வமான மொழிகள் உண்டு. எல்லா காகிதங்களும், மசோதாக்களும் அந்த ஐந்து மொழிகளிலும், மொழி பெயர்க்கப்பட்டு உறுப்பினர்களுக்குத் தரப்படவேண்டும். 180 உறுப்பினர்கள் இருப்பார்கள், ரஷ்யனுக்கு ரஷ்யனில் தரவேண்டும், சைனாக்காரனுக்கு சீன மொழியில் தர வேண்டும் என்றெல்லாம் ஐந்து அதிகார மொழிகள். நிறைய பேருக்கு ஆங்கிலம் தெரியும். பிரெஞ்சு என்னுடைய நண்பர் அவருக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும். நன்றாக ஆங்கிலம் பேசுவார் அதேமாதிரி ஒரு சீனரும் நன்றாக ஆங்கிலம் பேசுவார், ரஷ்யரும் நன்றாக ஆங்கிலம் பேசுவார், சில சமயங்களில் அந்த மொழிபெயர்ப்பு வருவதற்கு இரண்டு நிமிடம் தாமதமாகும், வந்து கொண்டிருக்கும் ஆங்கிலம் வந்துவிடும் சீனம், பிரெஞ்ச் எல்லாம் வருவதற்கு சிறிதுநேரம் ஆகும். அப்பொழுது நான் சொல்வேன் அந்த நண்பரிடம் லடிரச நஒஉநடநௌல இன்னொரு இரண்டு நிமிடத்தில் வந்துவிடும் உங்களுக்குத் தான் ஆங்கிலம் தெரியுமே, கூட்டத்தை ஆரம்பிக்கலாமே! அதில் உங்களுக்கு ஒன்றும் கஷ்டம் இல்லையே என்று சொல்வேன்.


என்னுடைய தாய்மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு என் கைக்கு கிடைக்கும் வரை நீங்கள் இந்தக் கூட்டத்தை அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கக்கூடாது என்று எனக்கு தகவல் சொல்லப்படும். அப்படிப்பட்ட தன்னுடைய சொந்த மொழியைப் பற்றிய ஒரு கர்வம் மற்றவர்களுக்கு இருக்கிறது. அந்த கர்வம் நமக்கு இல்லை. அந்தத் தமிழ்பற்று பாரதி சொன்ன தமிழ்பற்று வாழ்க! தமிழ் மொழி! வாழ்க! தமிழ்மொழி!, வாழ்க! தமிழ்மொழி! என்று அந்தப் பாட்டை நீங்களும் பாருங்கள். அப்படி பாடியவன் நாட்டில் பிறந்து வளர்ந்த நாம் அந்த தமிழ்பற்றில் அந்த அளவிற்கு நாம் தேறவில்லை.


பெண்ணிற்கு 33 பங்கு உரிமைதருவதற்காக 12 ஆண்டு கள், 15 ஆண்டுகள் நாம் நாடாளுமன்றத்தில் தவித்துக்கொண்டிருக்கிறோம், எந்த நாட்டில் பெண்மை வாழ்க என்று பெண்கள் பற்றி அவர்களுடைய உயர்ந்த தரத்தைப் பற்றி பாரதி பாடினானோ. அந்த இந்திய நாட்டில் பெண்களுக்குத் தரவேண்டிய உரிமையைத் தருவதற்காக இன்று வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறோம், இன்றுவரை அது முடிய வில்லை.


பாரதி சொன்ன தத்துவங்களையும், கோட்பாடுகளையும் மறுபடியும் மறுபடியும் நாம் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்வில், நாட்டின் வருங்காலம் சிறப்பாக இருக்கும் வகையில் செயலாற்ற வேண்டும். வைகோவின் மூலமாக அரசியலில் இன்னும்பல முன்னேற்றங்கள் வர வேண்டும், அவர்மூலம் இன்னும்பல மாற்றங்கள் வந்து அரசியல் மணம்கமழ்ந்து இந்த நாட்டிற்கு ஒரு முன்னோடியாக அவர் திகழட்டும். மக்கள் எல்லோருக்கும் நலன்விளையட்டும்.

இவ்வாறு பி.எஸ். இராகவன் உரை ஆற்றினார்.

செய்தி: சங்கொலி-1, சங்கொலி-2

Monday, January 01, 2007

மீண்டும் ஓர் பல்டி!

கலைஞர் கருணாநிதி மீண்டும் ஒரு முறை பல்டி அடித்துள்ளார். சில நாட்கள் முன்பு, திரை அரங்குகளின் கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டு, அதை பெறு அளவில் விளம்பரமும் செய்தி விட்டு, புதிய கட்டணத்தை அமல் படுத்த வெறும் ஒரு நாள் மட்டுமே இருந்த நிலையில் கட்டணத்தை மீண்டும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதிய அறிவிப்பின் படி, திறை அரங்குகளின் கட்டணத்தை, முன்பு இருந்ததை விட இரு மடங்கு அதிகரிக்க திரை அரங்குகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

தொடர்புடைய எனது முந்தைய பதிவு - திரை அரங்குகளில் கட்டணம் குறைப்பு

இதை பற்றி தினமலரில் வெளியான ஓர் அலசல்:


கண்துடைப்பு! * தியேட்டர்களில் மீண்டும் அதே நிலையில் டிக்கெட் கட்டணம் * கட்டண குறைப்பு அறிவிப்பு உத்தரவை மாற்றியது அரசு

சினிமா தியேட்டர்களில் கட்டணங்களை குறைத்து நிர்ணயித்த தமிழக அரசு மீண்டும் அவற்றை பெருமளவு உயர்த்திக் கொள்ள அனுமதியளித்துள்ளது. இதன் மூலம், சமீபத்தில் அரசு விதித்த நிபந்தனைகள் அனைத்தும் மாற்றப்பட்டு, டிக்கெட் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விட்டது.

எந்த தியேட்டரிலும் கட்டணங்கள் குறையப் போவதில்லை; மாறாக, உயரவே அரசு வழிவகை செய்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க., அரசு பதவியேற்ற பின் திரைப்படத் துறைக்கு பல சலுகைகளை அறிவித்தது. படப்பிடிப்புகளுக்கான கட்டணம் குறைப்பு, கேளிக்கை வரி முழுவதுமாக ரத்து ஆகிய அறிவிப்புகள் திரைப்படத் துறையினரின் பெரும் ஆதரவை பெற்றன. திரைப்படத் துறையினரும் முதல்வர் கருணாநிதியை வெகுவாக புகழ்ந்தனர். கேளிக்கை வரியை குறைத்ததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்ட போதிலும், தியேட்டர் உரிமையாளர்கள் பெரும் பலன் அடைந்தனர். ஆனால், டிக்கெட் விலையை அவர்கள் குறைத்துக் கொள்ள தயாராக இல்லை; திரைப்படத் துறையிலும் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. தியேட்டர் கட்டணத்தை குறைத்தால் அதிகளவு மக்கள் படம் பார்க்க வருவர் என்ற நம்பிக்கையிலும், திருட்டு 'வி.சி.டி.,' புழக்கத்தை ஒழித்து விடலாம் என்ற நம்பிக்கையிலும் கட்டணங்களை குறைக்குமாறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் அரசை கேட்டுக் கொண்டனர். இதை ஏற்று தியேட்டர்களுக்கான கட்டணத்தை குறைத்து அரசு நிர்ணயம் செய்தது.

மாநகராட்சி பகுதிகளில் அதிகபட்ச கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்க அரசு உத்தரவிட்டது. இதேபோல, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஏ.சி., வசதி மற்றும் ஏ.சி., வசதியில்லாத தியேட்டர்களுக்கு குறைந்தபட்ச கட்டணமும், அதிகபட்ச கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டன. அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களின் வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த அறிவிப்பால் தமிழகத்தில் உள்ள சில பெரிய தியேட்டர் உரிமையாளர்கள் மட்டும் அதிருப்தி அடைந்தனர். அரசு அறிவித்த புதிய கட்டண முறை ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், திடீரென 31ம் தேதி இரவு புதிய உத்தரவை அரசு பிறப்பித்தது. இந்த உத்தரவு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களை பாதிக்காத வகையில் சில நிபந்தனைகளுடன் தியேட்டர்களில் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதிப்பதாக அரசு தெரிவித்தது. ஆனால், இந்த உத்தரவால் மக்களுக்கு தான் பெரும் பாதிப்பு. தியேட்டர் உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம். ஏற்கனவே கேளிக்கை வரி விலக்கு போன்றவற்றால் பெரும் லாபம் சம்பாதித்து வரும் தியேட்டர் அதிபர்கள், பார்க்கிங் கட்டணம், கேன்டீன் வசதி போன்றவை மூலம் கூடுதலாக லாபமடைந்து வருகின்றனர். தற்போது அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவுப்படி, ஒரே வளாகத்தில் இரண்டுக்கும் அதிகமான ஏ.சி., வசதியுள்ள தியேட்டர்கள் மற்றும் அவை அனைத்திலும் சேர்த்து குறைந்தபட்சம் 800 இருக்கைகள் இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக, இது போன்ற தியேட்டர் வளாகங்களில் 800க்கும் அதிகமான இருக்கைகளெ இப்போதும் இருக்கின்றன. இந்த நிபந்தனை எந்த தியேட்டரையும் கட்டுப்படுத்த போவதில்லை. இதுதவிர, இருக்கை வசதிகள், டிஜிட்டல் ஒலி வசதி, ஜெனரேட்டர் போன்றவை தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்துமே கண்துடைப்பு வேலை தான். இந்த நிபந்தனைகள் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொள்ளவே வழி வகுக்கும்.

ஆனால், முதலில் 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச கட்டணம் தற்போது 95 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, கூடுதல் பொழுதுபோக்கு வசதி, குளிர்சாதன வசதியுடன் உணவு நிலையம் போன்றவை உள்ள தியேட்டர்கள் அதிகபட்சமாக ரூ.120 கட்டணம் வசூலிக்க அரசு அனுமதித்துள்ளது. தியேட்டர் வளாகங்களில் உள்ள பொழுதுபோக்கு வசதிகளை பயன்படுத்த தனியாக கட்டணம் வசூலித்து விடுகின்றனர். அதேபோல, உணவகங்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, இதை ஒரு பெரிய வசதியாக கூறி சலுகை அளிப்பது தியேட்டர் அதிபர்கள் லாபம் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதற்காக தான். தற்போது அரசு அறிவித்துள்ள புதிய கட்டணங்களால், எந்த ஒரு தியேட்டரிலும் விலை குறையப் போவதில்லை. மாறாக, இதற்கு முன்பு இருந்ததை விட உயரத் தான் போகிறது. மாநகர பகுதிகளில் உள்ள தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்திருந்தால், ஏற்கனவே நிர்ணயித்த கட்டணத்தை விட 10 ரூபாய் அல்லது 20 ரூபாய் வரை அதிகரித்துக் கொள்ள அரசு அனுமதித்து இருக்கலாம். ஆனால், இரண்டு மடங்கு கட்டணம் அதிகரிக்க அனுமதித்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் புதிய உத்தரவால், நான்கு பேர் கொண்ட குடும்பம் தியேட்டருக்கு சென்று இரண்டரை மணி நேரம் பொழுதுபோக்க குறைந்தபட்சம் 500 ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும். அப்படி பொதுமக்கள் செலவழிக்கும் தொகையில் அரசுக்கு செலுத்த வேண்டிய கேளிக்கை வரியும் இப்போது கிடையாது. அதை மீண்டும் அரசு வசூலித்து வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கலாம்.

நன்றி: தினமலர்



கட்டண உயர்வு பற்றிய செய்தி:


குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்களின் கட்டணத்தை மாற்றி அமைத்தது தமிழக அரசு

சென்னை : குளிர் சாதன வசதிகள் கொண்ட மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட தியேட்டர்களைக் கொண்ட வளாகங்களின் கட்டணத்தை மாற்றி அமைத்துள்ளது தமிழக அரசு.தியேட்டர்களின் கட்டணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தியேட்டர்களின் புதிய கட்டண வீதத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், குளிர்சாதன வசதி கொண்ட, இரண்டுக்கும் மேற்பட்ட தியேட்டர்களைக் கொண்ட வளாகங்களுக்கு அதிகபட்ச கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

* இரண்டும் அதற்கு அதிகமான குளிர்சாதன திரைகள்

*எல்லா தியேட்டர்களும் சேர்த்து 800க்கும் குறைவில்லாத இருக்கைகள்

*இருக்கையின் அகலம் 20 அங்குலத்திற்கும் குறையாமல்

*இருக்கை வரிசைகளுக்கு இடையில் இடைவெளி 1050 மி.மீ.,(41.5 அங்குலம்)க்கு குறையாமல் இருத்தல்

*100 சதவீத சக்தியை உள்ளடக்கிய ஜெனரேட்டர்

*ஜியான் அல்லது டிஜிட்டல் திரைப்படக் கருவி

*மூன்று பிரதான ஒலிபெருக்கிகள்

*மூன்று வழி ஒலி பெருக்கிகள்

*சுற்றுப்புற ஒலிபெருக்கி வசதிமுறை

*தானியங்கி சுத்திகரிப்புடன் கூடிய கழிப்பிட வசதி

*குளிர்சாதன வெளிக்கூடம்

*கணினி மற்றும் இணைய தள டிக்கெட் முறை

* டிக்கெட்டுகளை வீடுகளுக்கு சென்று சேர்க்கும் முறை

மேற்குறிப்பிட்ட 15 வகையான வசதிகள் கொண்ட தியேட்டர்களில் உயர்ந்த பட்ச கட்டணமாக ரூ. 95ம் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10ம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

*இரண்டும் அதற்கு அதிகமான குளிர்சாதன திரைகள்

* எல்லா தியேட்டர்களும் சேர்த்து 800க்கு குறைவில்லாத இருக்கைகள்

*100 சதவீத சக்தியை உள்ளடக்கிய ஜெனரேட்டர்

*ஜியான் அல்லது டிஜிட்டல் திரைப்படக் கருவி

*டிஜிட்டல் ஒலி அமைப்பு

மேற்கூறியவை கட்டாயமாக இருந்து தீர வேண்டியதுடன் முன்னர் கூறிய பட்டியலில் ஏதாவது ஐந்தை நிறைவு செய்யும் அமைப்புடைய தியேட்டர்களுக்கு உயர்ந்த பட்சமாக ரூ.85ம், குறைந்த பட்சம் ரூ.10ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

*கூடுதல் பொழுதுபோக்கு வசதிகளையும் உணவு நிலையத்தையும் குளிர் சாதன வசதியையும் கொண்ட ஒரே வளாகத்தில் மூன்றுக்கு மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தால் உயர்ந்த பட்ச கட்டணம் ரூ.120 , குறைந்த பட்ச கட்டணம் ரூ.10 நிர்ணயிக்கலாம்.

*தென்னிந்தியாவிலேயே ஒரே திறந்த வெளி தியேட்டரான 'பிரார்த்தனா' வின் தனித்தன்மை கருதி அரசு ஏற்கனவே, நிர்ணயித்து தற்போது கார்களுக்கும், படம் காண்போருக்கும் நடைமுறையில் உள்ள கட்டண வீதங்களெ தொடர்ந்து நீடிக்கும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செய்தி: தினமலர்


தியேட்டர் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம்
ஜனவரி 01, 2007

சென்னை: தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வில் தமிழக அரசு திடீர் மாற்றம் செய்துள்ளது. ஒரே வளாகத்தில் 2க்கும் மேல் உள்ள தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுவதும் அனைத்து தியேட்டர்களுக்கும், அவை அமைந்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்து கட்டணங்களை நிர்ணயித்து இன்று முதல் நடைமுறைக்கு வரும் என ஏற்கனவே அரசு ஆணையிட்டுள்ளது.

தற்போது சென்னை மாநகரத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அரசு அண்மையில் குறைத்துள்ள தியேட்டர்களுக்கான புதிய கட்டண விகிதங்களை முழுமையாக வரவேற்று நன்றி தெரிவித்துள்ளதுடன், சிறப்பாக அமைக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கை வசதிகளுடன், குளிர்சாதன வசதிகளையும் கொண்ட இரண்டுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் உடைய வளாகங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள அதிகபட்சக் கட்டணத்தை உயர்த்தித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து இக்கோரிக்கையில் உள்ள நியாயத்தின் அடிப்படையிலும், பொதுமக்கள் நலன் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையிலும், தியேட்டர் வளாகங்களுக்கான கட்டணங்களை பின்வருமாறு திருத்தி முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மொத்தம் 3 விகிதங்களில் தியேட்டர்கள் பிரிக்கப்பட்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் விகிதம்: 2 தியேட்டர்கள், அதற்கும் கூடுதலாக உள்ள, ஏசி வசதி உடைய தியேட்டர்கள், எல்லா தியேட்டர்களுக்கும் சேர்த்து மொத்தம் 800க்கும் குறைவில்லாத எண்ணிக்கை உள்ள இருக்கைகள், இருக்கையின் அகலம் 20 அங்குலத்திற்கும் குறையாமல் இருத்தல்;

இருக்கை வரிசைகளுக்கு இடையிலா இடைவெளி 1050 மில்லி மீட்டர் குறையாமல் இருத்தல், நூறு சதவீத சக்தியை உள்ளடக்கிய ஜெனரேட்டர், டிஜிட்டல் திரைப்படக் கருவி, டிஜிட்டல் ஒலி அமைப்பு, மூன்று பிரதான ஒலிபெருக்கிகள், சுற்றுப்புற ஒலிபெருக்கி வசதிமுறை, தானியங்கி சுத்திகரிப்புடன் கூடிய கழிப்பிட வசதி, குளிர்சாதன வெளிக்கூடம், கம்ப்யூட்டர் டிக்கெட் முறை, இணையதள டிக்கெட் முறை, வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யும் வசதி உடைய தியேட்டர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 10, அதிகபட்சம் ரூ. 95 டிக்கெட் கட்டணமாக இருக்கும்.

2வது விகிதம்: இரண்டுக்கும் அதற்கு அதிகமாக உள்ள தியேட்டர்கள், மொத்தம் 800க்கு குறைவில்லாத இருக்கைகள், நூறு சதவீத சக்தி கொண்ட ஜெனரேட்டர்கள், டிஜிட்டல் திரைப்படக் கருவி, டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கருவி மற்றும் முதல் வகையில் உள்ள 15ல் ஏதாவது ஐந்து வசதிகள் கொண்ட தியேட்டர்களில் குறைந்த பட்சம் ரூ. 10, அதிகபட்சம் ரூ. 85 ஆக டிக்கெட் இருக்கும்.

கூடுதல் பொழுதுபோக்கு வசதிகளையும், உணவு நிலையத்தையும், குளிர்சாதன வசதியையும் கொண்ட ஒரே வளாகத்தில், மூன்றுக்கும் மேற்பட்ட தியேட்டர்களின் உயர்ந்தபட்ச டிக்கெட் கட்டணம் ரூ. 120 ஆகவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ. 10 ஆகவும் இருக்கும்.

தென்னிந்தியாவிலேயே ஒரே திறந்தவெளி தியேட்டரான பிரார்த்தனாவில் தற்போது உள்ள நடைமுறைப்படி டிக்கெட் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி:thatstamil